உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.1,000 கோடி கனிமவள கொள்ளை காட்பாதரை பாதுகாக்கும் ஸ்டாலின்: அன்புமணி

ரூ.1,000 கோடி கனிமவள கொள்ளை காட்பாதரை பாதுகாக்கும் ஸ்டாலின்: அன்புமணி

சென்னை: 'தென் மாவட்டங்களில் நடக்கும், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கனிமவள கொள்ளையில், தி.மு.க.,வினருக்கு தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ntn2xusl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், உரிமம் பெற்ற மற்றும் சட்டவிரோத குவாரிகள், அதிக அளவில் செயல்படுகின்றன. கேரளாவில் மணல், ஜல்லி, எம்சாண்ட் குவாரிகளுக்கு தடை விதித்து, இயற்கை வளத்தை பாதுகாக்கின்றனர். ஆனால், தமிழகத்திலிருந்து அவை சட்டவிரோதமாக, அங்கு கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவோர், தி.மு.க., மற்றும் அதன் அனுதாபிகள் என்பதால், தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது. தென் மாவட்ட கனிமவளக் கொள்ளைக்கு, 'காட்பாதராக' ஆளும்கட்சி பெரும்புள்ளி ஒருவரும், அவரது குடும்பத்தினரும் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை பகைத்து கொள்ளும் சுரங்க அதிகாரிகள், கலெக்டர்கள் யாரும், தென் மாவட்டங்களில் தொடர்ந்து பணி செய்ய முடியாது என, வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. ஆனாலும், தி.மு.க., அரசு மவுனம் காக்கிறது. தென் மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளையின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த உண்மைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும்; ஏதோ காரணத்திற்காக நடவடிக்கை எடுக்காமல், அந்த 'காட் பாதரை' பாதுகாக்கிறார். அவரும் பதிலுக்கு விசுவாசம் காட்டுகிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய தி.மு.க., அரசு, கனிமவள கொள்ளையர்க ளுக்கு துணை போவதை, சகித்துக் கொண்டிருக்க முடியாது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் பா.ம.க., சார்பில் போராட்டம் நட த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venugopal S
அக் 24, 2025 21:45

இவர் சொந்த ஃபாதரை சமாளிக்கத் தெரியாதவர்! காட்ஃபாதரைப் பற்றி பேச வந்து விட்டார்!


duruvasar
அக் 24, 2025 09:05

திமுகாவில் இந்த மாதிரி கிரேட் கிரேட் கிராண்ட் காட் பாதர், கிரேட் காட் பாதர் , என இருகிறார்கள். பாதரே காட் பாதர் தான். .


T.sthivinayagam
அக் 24, 2025 07:04

மேலிடம் அல்வா தான் கொடுக்கும் எவ்வளவு அலப்பறை செய்தாலும்


vivek
அக் 24, 2025 08:00

சொந்த வாய் சிவநாயகம் இருநூறு அலப்பறை


Ravi Chandran.K, Pudukkottai
அக் 24, 2025 04:56

தென் மாவட்ட காட்பாதர் பிரச்சனை இருக்கட்டும்! வட மாவட்டத்தில் உங்க உட்கட்சி பிரச்சனைய முதல்ல சரி செய்யுங்க !


kjpkh
அக் 24, 2025 10:09

அப்போ கனிமவள கொள்ளை நடக்கலாம் என்று மனப்பூர்வமாக சொல்கிறீர்களா. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஐயா. ஊழலை பற்றி கேட்க எல்லோருக்கும் உரிமை உள்ளது. அவர் கட்சியை அவர் பார்த்துக் கொள்வார் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.


புதிய வீடியோ