உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / த.வெ.க., -அ.தி.மு.க.,வில் செல்வாக்கு நிர்வாகிகளை தி.மு.க.,வுக்கு இழுங்க; ஒன் டூ ஒன் சந்திப்பில் ஸ்டாலின் அசைன்மெண்ட்

த.வெ.க., -அ.தி.மு.க.,வில் செல்வாக்கு நிர்வாகிகளை தி.மு.க.,வுக்கு இழுங்க; ஒன் டூ ஒன் சந்திப்பில் ஸ்டாலின் அசைன்மெண்ட்

மதுரை : 'த.வெ.க.,- அ.தி.மு.க., கட்சிகளில் செல்வாக்குள்ள, தேர்தல் பணியாற்றக்கூடிய நிர்வாகிகள் யாரும் இருந்தால் அவர்களை நம் கட்சிக்கு அழைத்து வாருங்கள்' என 'ஒன் டூ ஒன்' சந்திப்பில் தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் 'அசைன்மெண்ட்' கொடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ளன. மதுரையில் ஜூனில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் உறுதியளித்தபடி தற்போது தொகுதி வாரியாக நிர்வாகிகளை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து 'ஒன் டூ ஒன்' சந்திப்பு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சிவகாசி, மதுரை தெற்கு தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார். தொகுதி நிலவரம், ஓட்டுக்கள் எண்ணிக்கை, தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு, எதிர்கட்சிகளில் பலம், அரசு நலத்திட்டங்கள் குறித்து மக்கள் மனநிலை என கேள்விகளை கேட்டு பதில் பெறுகிறார். அப்போது 'உங்க தொகுதியில் த.வெ.க., அ.தி.மு.க.,வில் செல்வாக்காக யாரும் இருக்காங்களா. இருந்தா நம்ம கட்சிக்கு வேலை செய்ய எங்கிட்ட அழைச்சுட்டு வாங்க' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க.,வினர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் தி.மு.க.,, அதன் கூட்டணி கட்சிகள் இறங்கியுள்ளன. இத்தேர்தலில் கருணாநிதி, ஸ்டாலின் என்ற தலைவர் முகங்கள், ஆளுங்கட்சியின் 5 ஆண்டு செயல்பாடு, நலத் திட்டங்களை தாண்டி, 'கூட்டணி பலம்' என்பதையே தி.மு.க., பெரிதும் நம்பி இறங்கியுள்ளது. அதேநேரம் எதிர் கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., தவிர வேறு குறிப்பிடும் வகையிலான எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததும் தி.மு.க.,விற்கு சாதகமானது. ஆனால், விஜயின் த.வெ.க., கட்சி வரவும், அவருக்கு கூடும் இளைஞர்கள் கூட்டமும் ஆளுங்கட்சியை அதிர வைத்துள்ளது. இதனால் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., வி.சி., கட்சிகளுக்கு 'கூட்டணி தடுமாற்றம்' ஏற்பட்டுள்ளது. மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் த.வெ.க.,வை பா.ஜ., வலைக்குள் கொண்டுவரும் அரசியலும் நடப்பதால் அ.தி.மு.க.,- பா.ஜ.,- த.வெ.க., கூட்டணி ஏற்பட்டால் தி.மு.க.,வுக்கு சிக்கல் ஏற்படும். இதை மனதில் வைத்து தான் தொகுதிகளில் செல்வாக்குள்ள த.வெ.க., அ.தி.மு.க.,, கட்சி நிர்வாகிகளை கடைசி நேரத்தில் எப்படியாவது தி.மு.க.,வுக்குள் இழுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் இதுபோன்ற 'அசைன்மெண்ட்டை' ஸ்டாலின் வழங்கியுள்ளார். நிச்சயம் அதுபோன்ற நிர்வாகிகளை துாக்குவோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vasan
அக் 10, 2025 00:32

சிறு குழந்தைகளை வீட்டில் பெரியவர்கள் விளையாட்டாக கேட்பார்கள், நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா என்று. குழந்தைக்கு என்ன தெரியும், பாவம், ஏதாவது ஒன்றை சொல்லும், சொல்லி விட்டு பகடமில்லாமல் சிரிக்கும்.


சந்திரசேகர்
அக் 09, 2025 19:59

ஆக மாற்று கட்சியில் இருந்து வந்தால் பதவி கிடைக்கும். திமுக கட்சிலேயே இருந்தால் மனசில் மட்டும் இடம் கிடைக்கும். மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களால் திமுக கட்சி இப்போது இயங்குகிறது. மாற்று கட்சியில் தகுதியுள்ள நபர் என்றால் பணம் அதிகமாகக் உள்ளவர்கள் என்று அர்த்தமா. அப்படி என்றால் நீங்கள் மாற்று கட்சி தொண்டர்களை இழுப்பதை விட அந்த கட்சி தலைவர்களை இழுத்தால் எப்போதுமே நீங்கள் தான் முதலமைச்சர்


Rajasekar Jayaraman
அக் 09, 2025 11:24

யாரை திராவிடத்துக்கு இழுத்தாலும் அழிவு அழிவு தான் 2026 இல்.


Natchimuthu Chithiraisamy
அக் 09, 2025 10:22

அதிமுகவில் இருந்து வந்த 11 பேருக்கு மந்திரி பதவி கொடுத்தாலும் தனக்கு 200 போதும் என்று பணியாற்றுகிறேன்.


duruvasar
அக் 09, 2025 09:39

ஏவ வேலு, செந்தில் பாலாஜி , சேகர் பாபு இவர்கள் ஏற்படுத்தியுள்ள பெஞ்ச் மார்க்குக்கு ஏற்ற ஆட்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகம். கண்ணப்பன் , ரகுபதி போன்ற அளவுக்கு ஆட்கள் கிடைப்பதே கடினம்தான்.


Haja Kuthubdeen
அக் 09, 2025 08:45

இவுக அசைன்ட்மென்ட் கொடுத்தாக்க எல்லோரும் ஓடி வந்துருவாய்ங்களா....இது தெரியாம போச்சே...


Kumar Kumzi
அக் 09, 2025 08:36

ஓங்கோலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது திருட்டுத்தனம் பண்ணி வெற்றி பெறலாமனு முடிவு பண்ணிட்டாப்ல இது தான்யா துண்டுசீட்டு கோமாளியின் திருட்டு திராவிஷ மாடல் ஆட்சி


ஆதிநாராயணன்
அக் 09, 2025 08:16

இந்த எண்ணமே இவர்களை விரைவில் அழித்து விடும்


திகழும் ஓவியன், Ajax Ontario
அக் 09, 2025 08:07

ஆகா இதுவல்லவா உலகுக்கே வழிகாட்டும் மாடல்...இவர்கள் எல்லாம் ஓட்டு திருட்டை பற்றி பேசுவது கசாப்பு கடைக்காரர் ஆட்டின் மீது கொண்ட பாசம் போன்றது


N S
அக் 09, 2025 07:44

அப்பாவை யாருக்கும் புரியவில்லை. வந்த செந்திலும், சேகரும் அள்ளித்தருவது போதவில்லை. அவர்கள் போல மேலும் பல புலிகள் அவர் கூறும் இடத்தில் இருக்க வாய்ப்பு இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை