உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சியினரை திருமா கட்டுப்படுத்தி இருக்கணும்: உயர் நீதிமன்றம்

கட்சியினரை திருமா கட்டுப்படுத்தி இருக்கணும்: உயர் நீதிமன்றம்

சென்னை: 'வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்த தலைவர், அவரது கட்சியினரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நுழைவு வாயில் வெளியே, கடந்த 7ம் தேதி, வழக்கறிஞரின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி., தலைவர் திருமாவளவன் கார் மோதியது. வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை, வி.சி., வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தாக்கி காயப்படுத்தினர். அவர்களிடம் இருந்து தப்பி, பார் கவுன்சில் அலுவலகத்தில் நுழைந்தபோதும், வழக்கறிஞர்கள் சிலர், அவரை சரமாரியாக தாக்கினர். இவ்விவகாரத்தில், தமிழக பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பார் கவுன்சில் இணை தலைவரான, வழக்கறிஞர் கே.பாலு, பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், கடலுாரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், கே.பாலுவுக்கு எதிராக, ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாலு அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர், பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய பின், சமூக வலைதளங்கள் என, பல்வேறு இடங்களில் இருந்து, தொடர் மிரட்டல் வருகிறது. மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதோடு, அவதுாறாக பேசியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்றார். காவல்துறை தரப்பில், 'வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'வழக்கறிஞரை, குழுவாக சேர்ந்து தாக்கி உள்ளனர். ஆனால், எதன் அடிப்படையில், இரு தரப்பு அளித்த புகாரில், இரண்டு பேர் மீது மட்டுமே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் தாக்கப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்த போலீசார், என்ன செய்து கொண்டிருந்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் அமைதியாக இருந்ததாகவே, நீதிமன்றம் கருதுகிறது. 'சம்பவ இடத்தில் இருந்த தலைவர், கட்சியினரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டாமா?' என, நீதிபதி கருத்து தெரிவித்தார். அதற்கு காவல்துறை தரப்பில், 'வழக்கறிஞர் ராஜிவ் காந்தியை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு, போலீசார் அழைத்து சென்றனர்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, 'சம்பவம் நடந்த இடத்தில் பதிவான, 'சிசிடிவி' பதிவுகளை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மணிமுருகன்
அக் 18, 2025 23:10

வாகனம் இருசக்கர வாகனத்தின்மீது போக்குவரத்து சிக்னல் கிட்ட மோதி உள்ளது என்று நினைக்கிறேன் விசிக கூட்டம் எப்படி சேர்ந்தது அவ்வளவு விரைவாக வாகனம் வந்ததா நீதிமன்றம் ஏன் திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பச் சொல்லவில்லை


krishna
அக் 18, 2025 10:55

4 பேரை தடுக்க முடியவில்லை. 50000 பேர் கூடிய கூட்டத்தை என்ன செய்ய முடியும். எனவே கரூர் சம்பவத்திற்க்கு அரசே முழுபொறுப்பாளர்.


Venugopal, S
அக் 18, 2025 10:39

அட நீங்க ஒண்ணு. முறைத்துப் பார்த்தா சும்மா தட்டு தட்டினர். அதுகூட இலேசாக. இதைப் போய் பெரிசு பண்ணிகிட்டு...


சாமானியன்
அக் 18, 2025 10:30

திமுக அரசு தனது கையாலகத் தனத்தை மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளது. சிறுசிறு நிகழ்வுக்கெல்லாம் கோர்ட் செல்லும் நடைமுறை சலிப்பைத்தான் தரும்.


ராமகிருஷ்ணன்
அக் 18, 2025 09:51

அடங்கமறு, அத்துமீறு திமிரிஅடி என்று சொல்வபர் பிறகு எப்படி அடிதடியை தடுப்பார்,


RAAJ68
அக் 18, 2025 08:27

அடங்க மறு என்பது தானே எங்கள் கொள்கை அது எப்படி நாங்கள் கட்டுப்படுத்த முடியும்


Sankaran
அக் 18, 2025 06:35

திருமாவளவன் அவருடைய தலைமை பண்பு குறித்து எந்த ஒரு கருத்தும் இல்லையா? Your honour


pmsamy
அக் 18, 2025 06:29

நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் சட்டத்தை பின்பற்றுவது இல்லையா? நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே . ஏன் திருமாவளவனை பற்றி பேச வேண்டும்?


vivek
அக் 18, 2025 10:30

ஏன் என்றால் அவருக்கு தலைமை பண்பு இல்லை


சமீபத்திய செய்தி