உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத்திய அமைச்சர் பிரதான் பேச்சால் பற்றியது நெருப்பு: சட்டசபை தேர்தல் வரை அணையாமல் காக்க தி.மு.க., தீவிரம்

மத்திய அமைச்சர் பிரதான் பேச்சால் பற்றியது நெருப்பு: சட்டசபை தேர்தல் வரை அணையாமல் காக்க தி.மு.க., தீவிரம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்ன ஒரு விஷயத்தை முக்கியமாக வைத்து, மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக வேகமாக அரசியல் செய்யும் தீவிரத்தில் இருக்கிறது தி.மு.க., கடந்த சில வாரங்களாகவே, 'மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை; குறிப்பாக, கல்வி திட்டங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை முறையாகக் கொடுக்கவில்லை. 'அதனால், தமிழக மாணவர்களின் மொத்த எதிர்காலமும் பாழாய் போகக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசத் துவங்கி உள்ளார்.அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் மத்திய பா.ஜ., அரசையும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் மோசமாக விமர்சித்தும் வருகின்றனர்.மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., ஸ்டாலின் சொன்ன கருத்தையே அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி பேசியது.இது, மத்திய அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால், தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. தி.மு.க.,வின் பேச்சுகளைக் கேட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'டென்ஷன்' ஆனார்.

தமிழகம் மறுக்கிறது

உத்தர பிரதேசத்தில் நடக்கும் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தமிழக அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து, பத்திரிகையாளர்கள் கேட்டதும் பொங்கி விட்டார்.'தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய்க்கான கல்வி நிதி ஒதுக்காதது குறித்து தெளிவாக விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது...' என துவங்கிய தர்மேந்திர பிரதான், மொத்த விவகாரத்தையும் போட்டு உடைத்தார்.'நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, அதன்படி செயல்படும்போது, தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. துவக்கத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டனர். ஆனால், பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுத்து வருகின்றனர்.'தமிழக அரசு, இதில் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழக கல்வி வளர்ச்சி மீது துளி கூட அக்கறையில்லை. மும்மொழி கொள்கையை தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. 'தமிழகம் அதை ஏற்று செயல்படுவதில் எவ்வித சிரமமும் இல்லை. தமிழ், ஆங்கிலத்தோடு, அண்டை மாநில மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கலாம்.'அதேபோல, தாய் மொழியான தமிழ் மொழி பிரதானமாக இருக்கலாம். புதிய கல்விக் கொள்கை அதற்கு எந்த இடத்திலும் இடைஞ்சல் ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது, வம்படியாக புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்பது, முழுக்க முழுக்க அரசியல் தான்.

மொழிப்போர்

'தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்று செயல்படத் துவங்கும் வரை, விதிகளின் படி, கல்விக்கான நிதியை மாநிலத்துக்கு மத்திய அரசால் ஒதுக்க முடியாது. சட்ட விதிகளை என்றைக்கு தமிழக அரசு பின்பற்ற ஒப்புக் கொள்கிறதோ, அன்றைக்குத்தான் கல்வி நிதியை ஒதுக்க முடியும்' என்று தர்மேந்திர பிரதான் அதிரடியாக கூறினார்.தி.மு.க., தரப்பினருக்கு, மென்ற வாய்க்கு மேலும் அவல் கிடைத்தது போல் ஆகி விட்டது; அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கத் துவங்கி உள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், 'மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க தொடர்ந்து வலியுறுத்தினால், மற்றொரு மொழிப்போர் ஏற்படும். அதை சந்திக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்' என்றார்.முதல்வர் ஸ்டாலினோ, 'மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவு பட்டியலில் உள்ளது தான் கல்வி. அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர் அல்ல. 'மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது' என 'பிளாக்மெயில்' செய்வதை தடித்தனத்தை, தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்; நீண்ட காலம் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். மாநிலத்துக்கான உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனி குணத்தை டில்லி பார்க்க வேண்டியிருக்கும்' என ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த விஷயத்தில் அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகள் குறித்தும், அப்போது ஆலோசனை கேட்டு உள்ளார்.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:பா.ஜ., தமிழகத்தை பழிவாங்குகிறது என்ற கோஷத்தை தொடர்ந்து வைக்கும்போது, சிறுபான்மையின ஓட்டுகள், வழக்கம் போல், தி.மு.க.,வுக்கே கிடைக்கும். கூடவே, பொதுமக்களில் பெரும் பகுதியினர், பா.ஜ.,வின் பழிவாங்கும் செயல்பாடுகளால், தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பர் என்ற எதிர்பார்ப்பு தலைமையிடம் உள்ளது.

போராட்டங்கள்

அதனால் தான், பா.ஜ.,வை கடுமையாக எதிர்ப்பதன் வாயிலாக, ஓட்டு அறுவடை செய்யலாம் என கணக்கு போடுகின்றனர். கல்விப் பிரச்னையில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்வதன் வாயிலாக, மாணவர்கள், பெற்றோரை தி.மு.க.,வுக்கு ஆதரவாக திருப்ப முடியும்.வரும் சட்டசபை தேர்தல் வரை, இந்தப் பிரச்னையின் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்வர். இதற்காக, பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசை கண்டித்து, பல்வேறு கட்ட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இதையே தொடர்ந்து பேசுவர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.பணம் இருந்தால் மட்டுமேபல மொழி கற்பிப்பா?முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக்கூடாதா?பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதல்வர்? 1960களில் காலாவதியான கல்விக் கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ., - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

MARUTHU PANDIAR
பிப் 21, 2025 15:28

எனவே இல்லாத ஒரு பூச்சாண்டியை மக்களிடம் காட்டி ஐயோ உங்களை முழுங்கி விடும், நாங்க தான் உங்கள காப்பாத்த முடியும் அப்படீன்னு மூளை சலவை செய்து ஏமாத்த தான் இந்த வெற்று வேட்டு மொழி, இனம் ,நிதி போன்ற காலணாவுக்கு வேலைக்காகாத உணர்ச்சி தூண்டும் மேட்டர்கள் . இதுங்கூடவே வோட்டுக்கு பணம் . குடிகாரர்களை வோட்டு . அம்புடுதேன் கலக பார்முலா 60 ஆண்டுகளாக . தமிழ் மக்கள் உருப்பட்ட விடும் பார்முலா அப்படீங்கறாங்க .


MARUTHU PANDIAR
பிப் 21, 2025 15:21

கிடப்பில் போடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள், பொய்கள், ஏமாற்று வேலைகள், பொய் உத்திரவாதங்கள் இவற்றை மக்கள் மறக்க வேண்டும். என் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை, எந்த மூஞ்சியுடன் மீண்டும் வோட்டு கேட்க வந்தாய் என்று கேட்டு விட்டால் ?


Anbuselvan
பிப் 18, 2025 21:21

மிக சரியாக சொன்னீர்கள். சூட்டை குறைக்காமல் நெருப்பை அணைக்காமல் இருக்க முயற்சி செய்வார்கள், மத்திய அரசு நீதிமன்றத்தை நாடி இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் ஒழிய. மூன்றாவது மொழி ஹிந்தியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உருது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டி எந்த மொழியாக கூட இருக்கலாம். இப்படி பேசுபவர்கள் அனைவரும் தாங்கள் நடத்தும் CBSE பள்ளிகளை துறக்க வேண்டும். செய்வார்களா?


Narasimhan
பிப் 18, 2025 09:13

மும்மொழிக்கொள்கை கொணர்ந்தால் மூன்றாம் மொழிக்காக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசின் உதவித்தொகை அதில் செலவழிந்து விடும். எனவே மும்மொழிக்கொள்கை இல்லாமல் பணம் வேண்டும் என்பதுதான் உண்மை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.


அன்பே சிவம்
பிப் 17, 2025 17:15

1). வட இந்தியாவில் நன்கு படித்த திறமையான பண்பான இளைஞர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் வேலைக்கு தேவை. 2). தமிழர்கள் மற்றும் அவர்களது திறமை, பண்பு, நேர்மை, hardwork மீது இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் நன்று தெரியும். 3). மற்ற மாநிலங்களில் தமிழர்களை வேலைக்கு எடுக்க ரெடியாக உள்ளனர். 3). அவர்களோ நாமோ அந்த பணியிடங்களை நிரப்புவது இல்லை. 3A). காரணம் நமக்கு இந்தி தெரியாது எண்பதே நிதர்சனமான உண்மை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 4).நமது முஸ்லீம் சகோதரர்கள் நமது தமிழ், ஆங்கிலம், அரபி மொழி, உருது மற்றும் உருது மூலம் இந்தி என ஐந்து மொழிகள் கற்று பன்முகத்தன்மை கொண்டவர்களாக சிறந்து விளங்க்கின்றார்கள். பாரட்டவேண்டிய விஷயம்தான். திறமையானவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 5). முஸ்லீம் சகோதரர்கள் இங்கே நம் தமிழ் மக்களுக்கு பாலமாக mediator ஆக இருந்து வடநாட்டில் இருந்தது வியாபார பொருகளை வாங்கி நமக்கு விற்று அவர்களும் நன்றாக புரிந்து வாழ்ந்து நம்மை வாழ்வை மேல் கொண்டு வருகின்றனர். 6). இந்த விசயத்தில் முஸ்லீம் சகோதரர்கள் huge பெரும்பாலான வியாபரம் செய்வதால் வேலை பளு அவர்களுக்கு உண்டாகிறது. 7). இந்த பளுவை குறைக்க முஸ்லீம் சகோதரர்களுக்கு நாமும் பன்மொழி கற்று அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.


venugopal s
பிப் 17, 2025 15:34

வாடி வா ,அவ்வளவு திமிரா உனக்கு, அடுத்த ஆண்டு தேர்தலில் இருக்கிற நாலும் நக்கிக் கொண்டு போக வைக்கிறோம்!


guna
பிப் 17, 2025 16:37

திமுக நடத்தும் சுமார் 45 பள்ளிகளில் ஹிந்தி பாடம் இருக்கிறது....5 முழம் போ வாங்கி உன் காதுல சுத்திகோ வேணுகோபால்


Anvar
பிப் 17, 2025 20:35

பாதிப்பு நம் வீட்டு பிள்ளைகள் அந்த நாலு MLA கல் அல்ல கோவாலு


thulasi ramu
பிப் 20, 2025 16:45

டேய் POக் பா கோவாலு, 1 ஹிந்தி தெரிந்தால் நீ நக்க தேவை இல்லை. 2 DMK பசங்க அவங்க சொந்த ஸ்கூல் இல் ஹிந்தி சொல்லி கொடுத்து நல்லா காசு பார்க்கிறார்கள். 3 இரு மொழி கோரிக்கையை சொல்லி வோட்டை வாங்கி மக்களை யாமாறுக்கிறார்கள்


Anbuselvan
பிப் 17, 2025 15:31

இப்படி திமுகவின் கருத்துக்கள் சட்டப்படி செல்லாது என்றால், மத்திய அரசையோ அல்லது அதன் அமைச்சரையோ பொய்யாக பேசுவது குறித்து ஏன் திமுக கட்சி மற்றும் அதன் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர கூடாது. அதையே போலதான் மத்திய நிதி அமைச்சரை சட்டத்திற்கு விரோதமான கூற்றுக்களை கூறி அவமதிப்பதற்கும் வழக்கு தொடர்ந்தால் இதற்கு சரியான தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்பு மத்திய அரசுக்கு சாதகமாக வந்தால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் பிறகு வாயை மூடி கொண்டு இருப்பார்களோ என்னவோ


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 17, 2025 15:28

திரு அண்ணாமலை திருட்டு திராவிட கூட்டங்களின் மீது செருப்படி கொடுப்பது போல் எல்லா இடங்களிலும் பேச வேண்டும். ஏழை பிள்ளைகள் மற்றும் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் பணம் உள்ளவர்கள் பல மொழிகளை கற்கலாம்என்பது என்ன நியாயம். இந்த அயோக்கியர்களின் மொழி பிரச்சனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக எடுத்துக் கூற வேண்டும். திருட்டு அயோக்கியர்கள்.


ஆரூர் ரங்
பிப் 17, 2025 14:32

திமுக குடும்பங்கள் நடத்தும் எந்தக் கட்டணக் கொள்ளை பள்ளியிலாவது சமச்சீர் கல்வித்திட்டம் உள்ளதா? மாநில அரசின் திட்டத்தையும் ஏற்கமாட்டோம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் ஏற்கமாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?.


தமிழர்களின் நலம் விரும்பி
பிப் 17, 2025 14:32

நான் சவுதியில் பணி புரிகிறேன். என்னுடன் இங்கு கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான தோழர்கள் உடன் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் சர்வ சாதாரணமாக ஹிந்தி பேசுவார்கள் எழுதவும் செய்கிறார்கள்..எனக்கு பேசவும் வராது பிறகு எங்க எழுத.ஒருமுறை சவூதி நண்பர் என்னை (you don't know your national language hindi...why are you alive in the world)என்று கேட்டான்..நம்முடைய அரசியல் வியாதிகள் நம்மை வளர விட மாட்டார்கள்.. ஆக வருங்கால இளைஞர்களே அனைத்து மொழிகளையும் கற்றுத் தேறுங்கள். . வாழ்வில் முன்னேறுங்கள்.. சிந்தித்து செயல்படுங்கள்..


Venkatesan Srinivasan
பிப் 18, 2025 00:55

பெரும்பாலான தமிழ் முஸ்லிம்கள் அரபி மொழி கற்று கொள்ள முனைந்து விட்டனர். அவர்களின் இறை வழிபாடு அரபியில் உள்ளது. ஆகவே அதனை சரியாக புரிந்து கொள்ள உதவும். மேலும் அரபு தேசங்களில் பணி புரிய உதவும். இந்துமதத்தில் வேதங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் உள்ளன. ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடல்கள் மட்டுமே தமிழில் உள்ளது. ஏனைய மாநிலங்களில் வேதங்கள் மட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த ஆன்மீக பெரியவர்கள் இயற்றிய பாடல்கள் உரைகள் அந்தந்த பகுதி மொழிகளில் உள்ளன. நாட்டின் கல்வி கொள்கை மத்திய அரசின் மூலம் எல்லா மாநிலங்களிலும் பரவலாக்கம் செய்யப்படுகிறது. எல்லா மாநிலங்களும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கல்வி கொள்கை ஒரு மாநிலம் மட்டும் ஏற்றுக் கொள்ள மறுப்பது அந்த மாநில ஆட்சியாளர்கள் தங்கள் மக்களை தனிமைப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக்கி வைக்க எடுக்கும் முயற்சி. இந்த மனப்பான்மை பிரிவினையை தூண்டும் செயல். மொழிப் போராட்டம் என்ற பெயரில் பிரிவினையை தூண்ட முயற்சி. இதில் பாதிப்பு அடைபவர்கள் சாமானிய தாய் மொழி தமிழ் கொண்ட இந்துக்கள் மட்டுமே. மேலும் அரசு பள்ளிகளை மட்டுமே நம்பி உள்ள ஏழை எளிய தமிழ் இந்துக்கள் மட்டுமே. அவர்களுக்கான தேசிய வாய்ப்புகள் தடுக்க படுகிறது. திராவிட ஆட்சியாளர்கள் தமிழ் இந்துக்களை வளரவிடாமல் வஞ்சித்து தங்களுக்கு அடிமையாக தலைமுறை தலைமுறையாக வைத்து கொள்ள சூழ்ச்சி. தற்போது உள்ள திராவிட ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தாய் மொழி தமிழ் இல்லை என்பதே உண்மை. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே. .


Berlioz
பிப் 18, 2025 01:45

சவுதியில் பணி புரியும் அன்பரே அவர் உங்களிடம் ஆங்கிலத்தில் கேட்டதாகவே குறிப்பிட்டுள்ளீர்கள் இதில் எங்கிருந்து ஹிந்தி வந்தது என்பது எனக்கு புரியவில்லை .ஹிந்தி அதிகளவில் பேசப்படுகிறேதே தவிர அது தேசிய மொழி என்பது ஒன்றும் இல்லை .


முக்கிய வீடியோ