உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூர் செல்ல கோர்ட்டில் அனுமதி கேட்கும் விஜய்; த.வெ.க.,வினர் அதிர்ச்சி

கரூர் செல்ல கோர்ட்டில் அனுமதி கேட்கும் விஜய்; த.வெ.க.,வினர் அதிர்ச்சி

சென்னை: கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு, நீதிமன்றத்தை நாட, விஜய் முடிவு செய்துள்ளதால், த.வெ.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். த.வெ.க., தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வந்தார். கடந்த 27ம் தேதி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=78h53hed&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கரூரில் இரவு விஜய் பேசியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 41 பேர் இறந்தனர். மேலும், 110க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனி விமானம்

இந்த சம்பவம் நடந்ததும், அங்கிருந்து அவசர அவசரமாக திருச்சிக்கு காரில் விஜய் சென்றார். அங்கிருந்து தனி விமானத்தில், சென்னை வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்திற்கான காரணத்தை விஜய் தெளிவுப்படுத்துவார் என, திருச்சி விமான நிலையத்திலும், சென்னை வீட்டிலும் காத்திருந்த தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதுவுமே சொல்லாமல் சென்று விட்டார் விஜய். மேலும், உயிரிழந்த தொண்டர்கள் குடும்பத்தினரையும், பொதுமக்களையும், காயம் அடைந்தோரையும் சந்தித்து, விஜய் ஆறுதல் கூறுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வரை அவர் செல்லவில்லை. கட்சியின் முக்கியமான இரண்டு நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதால், இருவரும் தலைமறைவாகி உள்ளனர். தேர்தல் பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜுனா வாயிலாக, சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விட்டனர். ஆனால், கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாட, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதனால், த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

போலீஸ் அனுமதி

இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கரூர் சென்று ஆறுதல் கூறாமல், விஜய் காலம் தாழ்த்துவதால், தவறு அவர் மீது இருப்பதாக, பல்வேறு கட்சியினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கட்சியினருக்கும் இது பெரும் குறையாக உள்ளது. சொந்தக் கட்சி தொண்டர்களையும், குடும்பத்தினரையும் பார்ப்பதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை. அனுமதி கேட்டு நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. விஜய் மற்றும் அவர் கூட இருப்பவர்களின் நடவடிக்கைகள் எதுவுமே புரியவில்லை. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rama adhavan
செப் 30, 2025 17:21

விஜய் செய்தது சரி. மீண்டும் அசம்பாவிதங்களை அரசு இயந்திரம், சமூக விரோதிகள் ஏற்படுத்த முயல்வதை தடுக்கவே இந்த யுக்தி. சம்பவம் நிகழ்ந்தவுடன் போய் இருந்தால் மேலும் கலவரம், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அவர் உயிருக்கும் ஆபத்து அதிகரித்து இருக்கும்.


sundar
செப் 30, 2025 15:47

சவுக்கு அரெஸ்ட் சமயத்தில் அவருக்கு எதிராக கோர்ட் அருகில் (சவுக்கு யார் என்றும் தெரியாமல்) போராட்டம் கூக்குரல் எழுந்தது. அதே போல் இப்போது இவர் கரூர் சென்றால் நடக்கலாம். பணம் பாதாளம் வரை பாயும்


பாலாஜி
செப் 30, 2025 11:20

நீதிமன்ற அவமதிப்பு குற்றம் கரூரில் செய்து பலர் உயிரிழக்க விபத்து ஏற்பட காரணமான ஜோசப் விஜய்க்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை அளிக்கவேண்டும்.


K.Ravi Chandran, Pudukkottai
செப் 30, 2025 10:51

பாதிக்கப் பட்ட சொந்த கட்சிக்காரனை பார்ப்பதற்கு எதற்கு நீதி மன்றம் செல்ல வேண்டும்? போக விருப்பம் இல்லை, போகாமல் இருக்க வழியைத் தேடுகிறார். மீனுக்கும், ஜாமீனுக்கும் வித்தியாசம் தெரியாதவனை எல்லாம் கூட வச்சுக்கிட்டா வண்டு முருகன் ரேஞ்சுக்குத்தான் அரசியல் பண்ணனும்.


Haja Kuthubdeen
செப் 30, 2025 16:16

விஜய் மீண்டும் கரூர் வந்தால் யாரு பாதுகாப்பு கொடுப்பது...


v srinivasan
செப் 30, 2025 06:31

தற்போதுள்ள சூழ்நிலையில் விஜய் அங்கு எப்படி செல்ல முடியும்? இந்த அரசாங்கம் குடுக்கும் பாத்துகாப்பை நம்பியா? மீண்டும் ஓரு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள நேரத்தில் தக்க பாத்துகாப்போ ஏற்பாடுகளோ இல்லாமல் அங்கே செல்வது அவருக்கும் பொது மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்


Senthoora
செப் 30, 2025 06:58

பாதுகாப்பு டுப்பாங்க, அங்குள்ள மக்களுக்கு தெரியும் விஜய் என்ன செய்தார் என்ற உண்மை, கரூரைவிட பிற இடங்களிலும் இருந்து பணத்துக்காக மக்களை கொண்டுவந்தது, தண்ணீர் கொடுக்கவில்லை. கரூர் மக்கள் கோபத்திலும் இருப்பதாக சொல்லப்படுது. விஜய் அங்கு போகாமல் இருப்பது நல்லது.


pakalavan
செப் 30, 2025 07:46

ஏன் உனக்கு தெரியுமா நீங்க குடிச்சு கூத்தடிச்சுட்டு ஆடுன ஆட்டம் எல்லாம் அங்க இருக்குற மக்கள் புட்டு புட்டு வச்சாங்களே


vivek
செப் 30, 2025 09:04

அலுவாச்சி நாடகம் பாக்கலயா


புதிய வீடியோ