வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நான் மூன்றாவது மொழியாக ஜப்பானியர்கள் பேசும் மொழியைக் கற்க விரும்புகிறேன். காரணம் மிகவும் துல்லியமான நேரம், நேர்த்தி, தொழில்நுட்பம், வீட்டு வேலைக்கென வேலையாட்களை நியமிக்காமல் தாங்களே வேலைகளைச் செய்யும் பண்புகள், நீண்ட நோயற்ற ஆயுசு காலம் போன்றவை என்னைக் கவருகிறது ஜப்பானியர்களின் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியத்தை தேடிப் பாருங்கள், இந்தியாவில் உள்ள ஜப்பானியர்கள் கம்பெனியில் பணிபுரியும் பிற நாட்டினருக்கும் அதே சட்டப்படி ஊதியம் வழங்கப்படுவதை தெரிந்து கொண்டேன். ஜப்பானிய மொழியை கல்விக் கூடத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று ஆலோசித்து வழி சொல்லுங்கள். ஒவ்வொரு மொழியையும் கற்றுக்கொள்ள இதுபோன்ற காரணங்களும் விருப்பமும் இருக்கட்டும். விருப்பத்தோடு குறைந்து ஐந்து மொழிகளைக் கூட கற்கலாம், கட்டாயமில்லாமல். நான இந்தி அல்லாமல் மூன்று மொழிகளைக் கற்றிருக்கிறேன். நான் சிறு வயதில் இந்தியை முறையாக கற்க அதற்குரிய சங்கத்திற்கு மூன்று நாட்கள் சென்று காத்திருந்தேன், விருப்பத்துடன் சென்றிருந்த என்னை சேர்த்துக்கொள்ளவிவ்லை, காரணம் அப்போது தமிழ்நாட்டில் சில சமூகத்தினர் மட்டுமே பெற்றோர்களின் கட்டாயத்தால் கற்கும் மொழியாக இருந்தது. நான் இந்தி மொழியை கற்காததால் என் வாழ்வின் முன்னேற்றத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. விரும்பி கற்போம். திணிப்பும் குறிப்பிட்ட மொழியை தூக்கிப் பிடிக்கவும் வேண்டாம். தற்போது இந்திய அரசாங்க ஆணைகளும் அறிவிப்புகளும் பல மொழிகளில் வெளிவந்தாலும், இந்தி மொழியின் புரிதல்கள் மட்டுமே இறுதியானது என்று குறிப்பிட்டு வெளிவருவது, சரியாக மொழிபெயர்க்க எவருமில்லயோ என்ற சந்தேகத்தையும், குழப்பத்தையும், எதிர்காலத்தை ஒரு மொழியை தூக்கிப் பிடிப்பதால் பல மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கேள்விக்குறியாகவும் மாற்றுகிறது. தயவு செய்து கட்டாயம் வேண்டாம் தேவையின் அடிப்படையில் விருப்பத்தோடு பல மொழி கற்கும் சூழலை உருவாக்க முயற்சிப்போம்.
திணிப்பு திணிப்பு என்று இல்லாத ஒன்றை, பேய், பேய் என்று தானே பயந்தவர்கள் மற்றவர்களை பயமுறுத்திகிறார்கள். மற்ற மொழிகளையும் குறிப்பாக இந்தியையும் கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு பயன் கொடுக்கும்
மூன்றாவது மொழி கற்றுக்கொள்வது நல்லது தான் ஆனால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது யாரு யாருக்கு என்ன தேவையோ எங்கு படிக்க வேண்டும் என்ன படிக்க வேண்டுமோ அவர்கள் தீர்மானிக்கிட்டும் எவரும் அத சொல்லக்கூடாது.
ஹிந்தி பிரசார சபா மூலம் நடத்தப்படும் தேர்வில் அப்பா, அம்மா மற்றும் குழந்தைகள் அனைவரும் ஒரே வகுப்பில் அமர்ந்து தேர்வு எழுதுவது அதன் மீது உள்ள ஆர்வம் தான். பல நபர்கள் இலவசமாக கற்று தருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு..
அரை சம்பளத்திற்கு வடநாட்டாரை வேலைக்கு அமர்த்தி அவர்களை மேய்க்க இந்தி படித்த தமிழர்கள் தேவை இவர்களுக்கு.
அடிவருடிகள்.
உழைக்கனும். முன்னேறனும் என்று நினைக்கறவனுக்குத்தானே வேறு மொழிகளையும் தெரிஞ்சுக்கிட்டா அனுகூலம் என்கிற எண்ணம் வரும். இலவசங்கள் டாஸ்மாக் சரக்கு இருந்தா போதும். இதுக்கு மேல என்ன வேணும். எதுக்கு உழைக்கனும், முன்னுக்கு வரணும், என்று நினைக்கிற வீணாப்போன தற்குறிகளுக்கு மொழிகளைப் பற்றி என்ன கவலை.
இலக்கண பிழை இல்லாமல் சுத்தமாக, மரியாதையாக ஹிந்தி மொழி பேசுவது டில்லியில் மட்டுமே, மற்ற வட மற்றும் வடகிழக்கு மாநில மக்கள் ஹிந்தியை துண்டு துண்டு வாக்கியத்தை முடிக்காமல் பாதியில் நிறுத்திவிடுவார்கள். மொழியை கற்றுக் கொள்ளும் "ஆர்வம் இல்லை போடா".... இது தான் இன்றைய நிலை தோழர்கள் சங்கத்தை வளர்த்து தொழில் துறையை மூடிவிட்டார்கள்... வேலை இருக்கு வா என்றால் வரவே மாட்டார்கள், வேலை இல்லாமல் சும்மா இருக்கும் போது வேலை தாங்க முதலாளி என்பான் நம்மவர்கள்.
மற்ற மாநிலத்தவரின் பங்கு நம் தமிழக உற்பத்தி துறையில் கிட்ட தட்ட 60 சதவீதம் அளவிற்கு தற்போது வந்து விட்டது. இனியும் தமிழும் ஆங்கிலமும் போதும் என்று இருந்தால் சுய தொழில் செய்வோர் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் வைத்திருப்போர் மிகவும் பாதிக்கப்படுவார்கள். உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு நம் தமிழக இளைஞர்கள் யாரும் வருவதில்லை. ஆகவே மற்ற மாநிலத்தவரை நம்பித்தான் தொழில் துறையே உள்ளது. எனக்கு தெரிந்த ஒரு நிறுவன அதிபர் கூறினார் வட மாநில இளைஞர்கள் இல்லாமல் இனி தமிழகத்தில் எந்த தொழிலும் நடத்த முடியாது துவக்கக் கூட முடியாது. ஆகவே இந்தி அல்லது வேறெதெனும் ஒரு மொழி கட்டாயம் தெரிந்தவர்கள் மட்டுமே தொழில் நிறுவனம் நடத்த முடியும். ஹிந்தி தெரிந்தால் ஆட்களை தேர்வு செய்வது எளிது. மலையாளம் அல்லது கன்னடம் தெலுங்கு தெரிந்தால் அந்த அந்த மொழி தெரிந்த இளைஞர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும். இதில் சாய்ஸ் கம்மி. ஹிந்தியில் சாய்ஸ் அதிகம். தொழில் அதிபர்கள் மட்டும் அல்ல அந்த அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஸ்கில்ட் லேபர் என்று சொல்லப் படும் சூப்பர்வைசர் மேனேஜர் அக்கவுண்ட் கூட கட்டாயம் மூன்றாம் மொழி அதிலும் ஹிந்தி தெரிந்திருப்பது கட்டாயம். இல்லை என்றால் வேலை வாங்க முடியாது. சமீபத்தில் எதிர்ப்பே இல்லாத ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஹிந்தியில் பிரச்சாரம் செய்ததால் தானே வெற்றி பெற்றது. இதை விட சிறந்த உதாரணம் வேறு உண்டா ஹிந்தி வேண்டும் என்பதற்கு. ஹிந்தி வேண்டாம் என்றால் தோற்றாலும் பரவாயில்லை என்று ஹிந்தியில் பிரச்சாரம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். திமுக ஹிந்தியில் பிரச்சாரம் செய்ததை பார்த்த தமிழக மக்களும் இனி திமுக ஹிந்தி படிப்புக்கு எதிராக இருக்காது என்று தானே திமுகவிற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்தனர்.
ஏன் பாவி தொழில் முனைவர் எல்லாம் கூடுதல் மொழி கற்க கஷ்ட பட்ட மாதிரி நம்ம சந்ததி கஷ்டம் பட கூடாது என்று தானே கூறுகிறார்கள். சரி நீ படிக்கும் போது எந்த வகுப்பில் ஆங்கிலம் சொல்லி குடுத்தாங்க. நீ அரசு பள்ளியில் படித்தால் உன் பிள்ளைகள் ஐ எந்த பள்ளியில் சேர்ப்பார். நாம் பெரும்பாலும் தமிழ் வழியில் கல்வி படித்து உள்ளார். பிள்ளைங்க எந்த வழி படிக்கிறார்கள். 200 ரூபாய் உ பி உங்கள் பிள்ளைகளை மட்டும் நல்ல கூடுதல் மொழி காசு கொடுத்து படிக்க வேண்டும். பாவப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்