உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்! அமித் ஷா சபதம்

தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்! அமித் ஷா சபதம்

சென்னை: ''தமிழகத்தில் எப்பாடுபட்டாவது தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.'தமிழகம் தலை நிமிர, தமிழனின் நடைபயணம்' என்ற பெயரில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரையின் நிறைவு விழா பொதுக் கூட்டம், புதுக்கோட்டையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். தனி விமானம் வாயிலாக திருச்சி வந்த அவர், சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z8zntu1h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுக்கோட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பியுஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: தமிழகத்தில் வரும் ஏப்ரலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும். வரும் நாட்களில் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும், இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் இணைந்து, வலுவான கூட்டணியை அமைக்கப் போகிறோம். எப்பாடுபட்டாவது தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்.நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் நிறைந்த ஆட்சி என்றால், அது தி.மு.க., ஆட்சி தான். பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மகன் உதயநிதியை முதல்வராக்குவது மட்டுமே, முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான நேரம் வந்து விட்டது. ஸ்டாலின் கனவு பலிக்காது.தே.ஜ., கூட்டணியை, தமிழுக்கு எதிரானது என பிரசாரம் செய்கின்றனர். ஆனால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வில், தமிழை அறிமுகம் செய்தது, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தான். உ.பி., மாநிலம், வாரணாசி பல்கலையில், பாரதி பெயரால் இருக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருக்குறளை, 13 மொழிகளில் மோடி அரசு மொழியாக்கம் செய்துள்ளது.தமிழில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வசதிகளை, மோடி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அமர்த்தி உள்ளார்.தி.மு.க., அமைச்சர் ஒருவர், சிறைக்கு சென்ற பின்னும், 248 நாட்கள் பதவியில் தொடர்ந்தார். ஒரு அமைச்சர், அரசு பணிக்கு பணம் வாங்கிய ஊழலில் சிக்கியுள்ளார். ஒரு அமைச்சர், கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். மணல் அள்ளும் ஊழலில், ஒரு அமைச்சர் சிக்கியுள்ளார். நிலக்கரி ஊழலில் ஒரு அமைச்சர் பெயரும், 6,000 கோடி ரூபாய் ஊழலில் மற்றொரு அமைச்சர் பெயரும் உள்ளது.இத்தனை ஊழல் நிறைந்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகம் வளர்ச்சி காண முடியுமா? தமிழகத்தில் ஏதாவது பணி செய்ய வேண்டும் என்றால், 'முதலில் 20 சதவீதம் கமிஷன் கொடுங்கள்' என்கின்றனர். 'டாஸ்மாக்' வருமானம் மற்றும் கடனை நம்பியே, தமிழக அரசின் நிதி நிலைமை உள்ளது.துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தடியடி நடத்தப்படுகிறது. ஆசிரியைகள் போராடினால், கைது செய்யப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் போராடினால், உடனுக்குடன் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். விவசாயிகளை கூட விட்டு வைக்கவில்லை. மற்ற மாநிலங்களின் நச்சு கழிவுகளை கொட்டும் குப்பை கிடங்காக தமிழகத்தை தி.மு.க., அரசு மாற்றியுள்ளது. தமிழகத்தில் ஹிந்துக்களுக்கும், அவர்களின் சமய நம்பிக்கைக்கும் முடிவு கட்டும் வகையில் தி.மு.க., அரசு செயல்படுகிறது.அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின்போது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஹிந்துக்கள் ஊர்வலம் நடத்தினால், தடை விதிக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தின் மாண்பை, முதல்வர் ஸ்டாலின் குறைத்துள்ளார்; ஹிந்துக்களின் சமய உரிமையை பறித்துள்ளார்.கடந்த 2012ம் ஆண்டு வரை, மத்திய ஆட்சியில், 1 லட்சத்து 53,000 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்தது. மோடி அரசு, 2014 முதல் 2024 வரை, 11 லட்சம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.கடந்த 2024ல் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்ற பின், ஒடிஷாவில் பா.ஜ., ஆட்சி, ஆந்திராவில் தே.ஜ., கூட்டணி ஆட்சி, மஹாராஷ்டிராவில் தே.ஜ., கூட்டணி ஆட்சி, 27 ஆண்டுகளுக்கு பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி என வெற்றி தொடருகிறது.சமீபத்தில் பீஹாரில் வெற்றி பெற்றோம். அடுத்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன், ஜார்ஜ் கோட்டையை அடைவோம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

பீஹார், திருவனந்தபுரம் காற்று தமிழகத்திலும் வீசும்

தி.மு.க., அரசு எப்போது வீட்டுக்கு செல்லும் என்பதே தமிழக மக்களின் வேண்டுதல். 'இறைவா, காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா' என அவர்கள் வேண்டியபோது தான், தேசிய ஜனநாயக கூட்டணியை, மத்திய அமைச்சர் அமித் ஷா உருவாக்கினார். தி.மு.க., ஆட்சியில் எங்கும் போதை பொருள் மயம். தமிழகத்தில் பெண்கள், குடும்பங்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. பீஹாரில் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. திருவனந்தபுரத்தில் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. பீஹார் மற்றும் திருவனந்தபுரத்தில் வீசிய அதே காற்று, தமிழகத்திலும் வீசும். அதற்காகவே, அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். இனி, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாது. வரும் நாட்களில், பிற கட்சிகள் கூட்டணிக்கு வரும். தி.மு.க., ஆட்சியை அகற்ற, மூன்று மாதங்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்.- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

தலையாட்டி பொம்மை போல முதல்வர்

தலையாட்டி பொம்மை போல் தமிழக முதல்வர் இருக்கிறார்; சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கிறார். பொங்கலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தால், மக்கள் ஓட்டு போடுவர் என தி.மு.க., நம்புகிறது. கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, ஒரு ரேஷன் கார்டு மீது, 2 லட்சத்து 4,000 ரூபாய் கடன் இருந்தது; தற்போது, 4 லட்சத்து 54,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கடனை, முதல்வர் ஸ்டாலின் கட்டப் போவது கிடையாது. நம் குழந்தைகள் தான் கட்ட வேண்டும். ஆட்சிக்கு வந்து, 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளனர். இந்த அளவுக்கு, நாட்டில் எந்த மாநிலமும் கடன் பெற்றது கிடையாது. தமிழகத்துக்கு வரும் தொழில் நிறுவனங்களிடம் கமிஷன் கேட்பதால், அந்த நிறுவனங்கள் ஆந்திரா நோக்கி செல்கின்றன. தமிழக மக்களின் வலிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியே மருந்து.- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Mani . V
ஜன 06, 2026 06:02

பாஸ், அது ஒழித்து அல்ல ஒளித்து.


Venugopal S
ஜன 05, 2026 22:08

தமிழகத்தை இதுவரை எந்த சாணக்கியனும் வென்றதில்லை! இனிமேலும் முடியாது!


vivek
ஜன 05, 2026 22:40

பாவம் வேணு. கதறல் பத்தலை


Ramesh Sargam
ஜன 05, 2026 20:59

ரொம்ப புண்ணியமாப்போகும். சீக்கிரம் ஒழியுங்கள். கூடவே மற்ற ஊழல் கட்சிகளையும் ஒழியுங்கள்.


T.sthivinayagam
ஜன 05, 2026 19:25

திமுகாவை மட்டும் ஒழித்தால் பிஜெபி தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியுமா அதிமுகாவையும் புதிய கட்சியான தவெகாவையும் சேர்த்து ஒழிக்கனும் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


Oviya Vijay
ஜன 05, 2026 15:13

ஹாஹாஹா... வாய்ப்பில்லீங்கோ... எதிர் தரப்பில் பலமாக இருப்பீர்களேயானால் நீங்கள் சொல்வதை நம்பலாம்... ஆனால் எதிர்தரப்பில் இருக்கும் நீங்கள் அனைவரும் ஓட்டை உடைசல்களாக இருக்கும் போது உங்களுக்கு வெற்றி எப்படி சாத்தியமாகும்... நீங்களும் ஜீயும் தேர்தல் முடியும் வரையில் நூறு தடவை ரோடு ஷோ நடத்திக் காட்டினாலும் 2026 தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றியை உங்களால் பறிக்கவே முடியாது... வேணும்னா நீங்களும் நானும் ஒத்த ரூபா பந்தயம் கட்டிக்கலாமா... ஒத்த ரூபா பந்தயம் கட்டினாலும் ஒரு கோடி ரூபா பந்தயம் கட்டினாலும் நீங்க தோக்க தான் போறீங்க...


vivek
ஜன 05, 2026 22:41

ecg xray எல்லாம் ரெடியா...இதயம் பத்திரம்


M.Selvam
ஜன 05, 2026 14:56

அமித் shah நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்…


SULLAN
ஜன 29, 2026 15:28

ஆனால் கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதே?? என்றால் கேட்க மாட்டேங்கிறார்.


மணியன்
ஜன 05, 2026 13:42

பத்து ஓட்டு கூட வாங்கமுடியாத தறுதலைகள் பேச்சைக்கேட்டு மாவீரன் அண்ணாமலையை ஓரங்கட்டிவிட்டு இனி வாய்ச்சவடால் விட்டு என்ன பயன்.தொடர்ந்து அண்ணாமலை செயல்பட்டிருந்தால் இப்போது திமுக மாற்றாக அவர் அமைத்த கூட்டணி மிக வலுவான நிலையில் இருந்திருக்கும்.2.75% லிருந்த கட்சியை 11.5க்கு கொண்டுவந்த கள உழைப்பாளி அண்ணாமலையை தடுத்த செயல் கட்சியை மிக பலவீனப்படுத்தி விட்டது.


SULLAN
ஜன 31, 2026 15:19

நமக்கு இது தேவையா மணியா??


sundarsvpr
ஜன 05, 2026 13:19

அரசு ஊழியர்கள் ஊழல் பேர்வழிகள் என்ற பொய்யான வதந்தியை மக்களிடையே பரப்பி அரசியல்வாதியான அமைச்சர்கள் செய்த ஊழல்கள் வெளியில் வராமல் பார்த்துக்கொண்டனர். ஊழல் ஊழல் என்ற செய்திகளை கூறும் ஊடகங்கள் தான் உண்மையான செய்திகளை சரியாக கொண்டுசெல்வதில்லை. அண்ணாதுரை குமாரசாமி ராஜா காமராஜ் போன்ற நேர்மையானவர்கள் தேர்தலில் தோற்றார்கள் இவர்கள் ஊழல் செய்யாதவர்கள். இதற்கு ஒரு வழி சுயேச்சை வேட்பாளர்களை தேர்ந்து எடுங்கள் அவர்கள் ஆட்சி அமைத்தால் ஊழல் இல்லா ஆட்சி அமையும். குடும்ப ஆட்சி காணாமல் போகும்.


Muralidharan S
ஜன 05, 2026 12:39

2ஜீ வழக்கில் ஊழல் நிரூபிக்க முடியவில்லை.. முந்தைய கான்-cross ஆட்சியின் பிற ஊழல் வழக்குகளின் நிலை என்ன என்று தெரியவில்லை.. நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி திராவிஷ ஆட்சி தான் என்று கூறுவதை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றங்களில் நிரூபித்து தண்டனை பெற்றுத்தர 12 வருடங்கள் போதாது என்றால் இன்னும் எத்தனை வருடங்களாகும் ?? ஊழல்களை ஆதாரபூர்வமாக எடுத்து பேசி வந்த அண்ணாமலை அவர்களையும் அகற்றியாகிவிட்டது...தமிழகத்தில் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்து இருந்த மக்களுக்கு பாஜகவின் மீது நம்பிக்கை போய்க்கொண்டு இருக்கிறது.... திராவிஷ ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று சொல்லில் இருப்பது செயல்வடிவில் இருக்க எந்த ஒரு strategy யூம் இருப்பதாக எதுவும் தெரியவில்லை.. வெறும் வார்த்தைகள் விளையாட்டு தமிழகத்தில் இருந்து திராவிஷா ஆட்சியை ஒழிக்க எடுபடாது.. மக்களுக்கு நம்பிக்கை வரும்படி செயலில் செய்துகாட்டுங்கள்.. ஓட்டுக்கள் திராவிஷத்திற்கு எதிராக தானாக திரும்பும்படி சட்டப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.. இல்லேயேல் மீண்டும் திராவிஷா ஆட்சிதான்.. அவர்களிடம்தான் பணம் கொட்டிக்கிடக்கிறது.. யாரையும் எதையும் - வேட்பாளர்கள் உள்பட அனைத்தையும் அவர்களால் விலைக்கு வாங்க முடியும்.. ஆட்சிக்கு வரமுடியும்.. அதில் திறமை மிக்கவர்கள் அவர்கள்..


Mohan
ஜன 05, 2026 12:29

ஷாவுக்கு ஒரே தமாஷ் தான் ..


புதிய வீடியோ