உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா

விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி கூட்டங்களை அதிரடியாக தகர்த்தெறிந்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஆண்டாண்டு காலமாக பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த பயங்கரவாதிகள் பலரும் இறந்தனர்.'அடுத்த கட்டமாக தாக்குதல் இருக்காது. ஆனால், பாகிஸ்தான் மீண்டும் ஏதாவது விபரீத சாகசம் காட்டினால் இந்தியா தக்க பதிலடி அளிக்கும்' என ராணுவ தரப்பில் எச்சரிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில், இதை தெளிவாக விளக்கினார், இந்திய விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங். ஆனால், பாகிஸ்தான் தனது அடாவடிதனத்தை நிறுத்தியபாடில்லை. இந்தியா நடத்திய தாக்குதலில் வெகுண்டு எழுந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், 'நாங்கள் பதிலடி தருவோம்' என கொக்கரித்தார்.ஜம்மு - காஷ்மீர் எல்லையில், கட்டுப்பாடு எல்லைக்கோடு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் பகுதியில் உள்ள சீக்கிய குருத்துவாரா மீது தாக்குதல் நடத்தியது. இதில், 15க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், சீன தயாரிப்பு ஏவுகணையை அனுப்பி சோதித்து பார்த்தது பாகிஸ்தான். ஆனால், இந்தியாவின் வலுவான ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பு, சீன ஏவுகணையை வானத்தில் இடைமறித்து தாக்கி அழித்தது.இதையடுத்து, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க, 'ஆப்பரேஷன் சிந்துார் - 2' தாக்குதலை இந்தியா துவக்கியுள்ளது. நேற்று ராணுவ தரப்பில், 'அப்பாவி மக்கள் பலரும், பாகிஸ்தான் தாக்குதலில் பலியாகி வருவதால் இந்தியா அமைதியாக இருக்காது. இதற்கு தகுந்த பதிலடி தரப்படும்' என எச்சரிக்கப்பட்டது. அவ்வாறே, பாகிஸ்தான் மீது தாக்குதல் நீடிக்கிறது. எல்லையில் தாக்கிய பாகிஸ்தானுக்கு பதிலடி தர அந்நாட்டின் எல்லைக்குள் புகுந்து, லாகூர், ராவல்பிண்டி, கராச்சி என பல பகுதிகளில் இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.ஆப்பரேஷன் சிந்து என்பது பாகிஸ்தான் மீதான பயங்கரவாத எதிர்ப்பின் பலகட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான். பாகிஸ்தானில், 21 இடங்களில் பயங்கரவாதிகள் பயிற்சி கூடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதில் முதல் கட்ட தாக்குதலில், ஒன்பது இடங்களில் மட்டுமே இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது; அனைத்து இடங்களையும் நிர்மூலம் ஆக்கியது.ஆனால், முக்கிய பயங்கரவாதியான மசூத் அசார், ஹபீஸ் சையத் உட்பட பலரும் தப்பியுள்ளனர். ராணுவ கட்டடங்களில் முக்கிய பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.பயங்கரவாத சிந்தனை கொண்ட பாக்., ராணுவ தளபதி முல்லா முனீரும், இந்தியாவின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளார். ராணுவ தாக்குதல் தொடரும் பட்சத்தில் பயங்கரவாத தலைவர்கள் பலரும் கொல்லப்படலாம். தற்போது விடுபட்டு போன பலரும் கூண்டோடு அழிக்கப்படலாம். பயங்கரவாதத்தின் ஆணி வேரை அழித்து ஒழிக்கும் வரை, இந்தியாவின், 'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் பல கட்டங்களாக தொடர வாய்ப்புள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bala
மே 10, 2025 01:19

கிருஷ்ண பரமாத்மாவிடம் துரியோதனன் பாண்டவர்களுக்கு வசிக்க ஐந்து வீடுகளையாவது கேட்டபோது ஊசிமுனை அளவு இடம்கூட தரமுடியாது என்று துரியோதனன் சொன்ன பிறகுதான் குருக்ஷேத்திர யுத்ததில் சந்திப்போம் என்று கூறிவிட்டார். அதேபோல்தான் பாகிஸ்தான் தன் நாட்டில் இயங்கும் ஒரு தீவிரவாதியைக்கூட அழிக்கவோ கட்டுப்படுத்தவோ மாட்டோம் என்று செயல்படுவதாலேயே இந்தியாவுக்கு வேறு வழி தெரியவில்லை. இதுவே சரியான தருணம் யுத்தம் செய்வதற்கு.இனிமேலும் தாமதித்தால் அது நம் பாரத நாட்டு மக்களுக்கே ஆபத்தாக முடியும் என்று கருதியே மத்திய அரசு இந்த கடினமான முடிவை எடுத்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. தீவிரவாதத்தை வேரோடு அழிப்பது ஒன்றே இரு நாட்டிலும் அமைதி நிலவ தீர்வு. வாழ்க பாரதம், வாழ்க பாரத நாட்டு மக்கள், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்


sankaranarayanan
மே 09, 2025 13:39

கையோட கையாக இந்த சமயத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நமது காஷ்மீரை உடனே எப்பாடுபட்டாவது மீட்டு இந்தியாவோடு சேர்த்துவிடுங்கள் பல நாள் திருடன் ஒருநாளிலேயே அக்கட்டுவிடுவான். பிறகு சண்டையே இருக்காது பிறகு பாகிஸ்தானை பலுசிஸ்தான் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பலுசிஸ்தானை ஒரு தனிநாடாகவே பிரித்துவிடுங்கள் இவர்களது கொட்டம் அப்போதுதான் அடியோடு அழியும்


Ramesh Sargam
மே 09, 2025 12:03

சாது மிரண்டால், காடு கொள்ளாது - இந்த வார்த்தைகளுக்கு இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கொடுக்கும் பதிலடி சரியான உதாரணம். இந்தியா எப்பொழுதும் அஹிம்ஸா வழியை பின்பற்றுவார்கள் என்று அந்த அறுபட்ட பாகிஸ்தானியர்கள் நினைத்து விட்டார்கள். எங்களை சீண்டினால் உங்களை வேரோடு அழித்துடுவோம். இனிமேல் ஹிம்சை வழிதான் இந்தியா பாகிஸ்தான் மீது பின்பற்றும்.


ramesh
மே 09, 2025 06:46

super, உசுப்பேத்தியே உடம்ப ரணகள படுத்திக்குறதுல பாகிஸ்தான் காரனுகளுக்கு எவ்வளவு சந்தோஷம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை