உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னர் ரவி மாற்றம் ஏன்?

கவர்னர் ரவி மாற்றம் ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 'தி.மு.க.,வை பாடாய்ப்படுத்திய இவரை, ஏன் திடீரென மாற்ற வேண்டும்?' என, கேள்விகள் எழுந்தன. இதற்கு பா.ஜ., வட்டாரங்களில் சொல்லப்படுவது இது தான்.'கவர்னர் ரவி மீது தி.மு.க.,வுக்கு கடும் வெறுப்பு. இவரை வைத்து அக்கட்சி அரசியல் செய்தது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும், கவர்னரை ஒரு பேசு பொருளாக்க தி.மு.க., திட்டமிட்டது. எனவே தான் அவர் மாற்றப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8jyhofq1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'இது அவருக்கு ஒரு பின்னடைவு என சிலர் சொன்னாலும், அது உண்மையல்ல. மேற்கு வங்கத்திற்கு அவரை மாற்றியது, ரவிக்கு ஒரு பதவி உயர்வு' என, பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது.ஏன் மேற்கு வங்கம்? அங்கு கவர்னராக இருந்த அனந்த போஸ் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மேற்கு வங்க பா.ஜ.,வினர் எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும் ஒதுக்கியது இல்லையாம். கவர்னர் மாளிகையிலும், இவருக்கு எதிரான புகார்கள். மேலும், மம்தாவிற்கு எதிராக செயல்படாமல் நெருக்கமாகி விட்டார். இதனால் பதவி விலகும்படி, பா.ஜ., மேலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.'ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனந்த போஸை விட, ஐ.பி.எஸ்., அதிகாரியான ரவி தான், மம்தாவிற்கு சரியான நபர். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சி வன்முறையை கட்டவிழ்த்து விடும். இதை சமாளிக்க ரவி தான் பொருத்தமானவர். அதனால் தான், அனந்த போஸ் மாற்றப்பட்டார்' என, சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

vivek
மார் 08, 2026 22:09

இங்கே வள்ளுவருக்கு அலங்காரம் பண்ணது போல, அங்கே ரபீந்திரநாத் தாகூருக்கு காவி உடை போட்டு கணக்கை ஆரம்பித்து வைக்கலாம். அப்புறம் வள்ளலாரை சனாதன இந்துவாக வேசம் போட்டுது போல, ராஜா ராம்மோகன் ராய்க்கு அந்த வேசம் போடலாம். சிரங்கு வந்த குரங்காச்சே. சும்மா இருக்குமா?


என்னத்த சொல்ல
மார் 08, 2026 17:50

திமுகவுக்காக நல்ல விளம்பரம் / மீடியாக்களுக்கு ஹாட் நியூஸ் கொடுத்து கொண்டிருந்தார்.. இந்த மாறுதல், திமுகவுக்கு பின்னடைவுதான்.


Gnana Subramani
மார் 08, 2026 15:09

ஸ்டாலின் அளவு பொறுமை, மம்தாவுக்கு கிடையாது.


kannan
மார் 08, 2026 13:28

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர ரவி எப்படி உதவினாரோ அதே போல அங்கேயும் உதவுவார். இவரை மாற்றியதுன் மூலம் ஒரு சிறந்த பொழுது போக்கை தமிழ்நாட்டு மக்கள் இழந்துள்ளனர்.


duruvasar
மார் 08, 2026 16:00

ஸ்டாலின் இருக்கும் வரை தமிழர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை வேறு எவரும் தரமுடியாது. சும்மா, பூனை மேல் மதில் என நெனைச்சி பாருங்கள். ஆயுள் முழுதும் ஒரே பொழுதுபோக்குத்தான்.


தஞ்சை மன்னர்
மார் 08, 2026 12:10

மேலும் அங்கே இருந்த கவர்னர் மம்தாவோடு ""ஒற்றுமையாக"" செயல் பட்டார் என்று அப்போ எங்களுக்கு பிரிவினை தூண்டும் ஒரு நபர் வேண்டும் அப்படித்தானே


SUBBU,MADURAI
மார் 08, 2026 13:55

தறி கெட்டு ஓடும் ஒரு சண்டி குதிரைக்கு ஒரு கடிவாளம் வேண்டும் அல்லவா அதற்காகத்தான் மேற்கு வங்கத்திற்கு இந்த கவர்னர் RN ரவியின் நியமணம்


தஞ்சை மன்னர்
மார் 08, 2026 12:08

முதலில் நீங்களே சொல்லியாட்சி ""பாடாய் படுத்தினார் "" என்று அப்போ இதில் இருந்து தெரியவில்லை ஒண்டி இருக்கும் மைய அரசின் கேவலமான புத்தி எப்படி பட்டது என்று


Rathna
மார் 08, 2026 11:43

வங்காளம், பங்களாதேஷி மற்றும் பாகிஸ்தானிய வழியில் செல்வதால் அதை அடக்க இவரை மாதிரி ஒரு ஆளுநர் அங்கே கட்டாயமாக தேவை.


saravanan
மார் 08, 2026 11:26

ஆளுநர் ரவி தமிழக கவர்னராக இருந்த போது அவரின் நடவடிக்கைகள் சரியா, தவறா என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும் இதே தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்த போது அன்றைய எதிர்கட்சி அதாவது இன்றைய ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனை தொந்தரவுகளை அவருக்கு கொடுத்தனர் எதோவொரு நிகழ்ச்சியிலே மகள் வயதுடைய பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார் என்பதை எப்படியெல்லாம் திரித்து கதை கட்டி அவரை அவமான படுத்தினர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதகன் மீண்டும் ஒருமுறை உண்மையாகியிருக்கிறது. வேறென்ன சொல்ல


ஜா. லியோ
மார் 08, 2026 09:50

ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.


SUBBU,MADURAI
மார் 08, 2026 10:07

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 (2) B ன் படி மாநில சட்டப்பேரவையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.


vivek
மார் 08, 2026 18:22

1742 பி பிரிவின்படி, “ ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் அல்லது ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்து, மாற்று அரசு அமைக்க வழி இல்லாத நிலையில், ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமன்றத்தைக் கலைக்கலாம்.”. நடந்து கொண்டிருப்பது பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சி. இதை படிக்காமல், புரிந்து கொள்ளாமல், என்னமோ ஆட்டுத்தாடிக்கு வானளவிய அதிகாரம் உள்ளது போல பிலிம் காட்டுறியே.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 08, 2026 09:23

கவர்னரை மாற்றிவிட்டால் மட்டும் வரும் தேர்தலில் அவரைப்பற்றி பிரச்சாரம் செய்யமாட்டார்களா? தமிழ்நாட்டில் ஆட்சியைப்பிடிப்பது இலக்கு அல்ல. அதிமுகவை ஒழித்து திமுகவை வாழவைப்பதே இலக்கு. அந்த இலக்கு நிறைவேறிவிட்டது. அடுத்த இலக்கு திரிணாமுல் காங்கிரசை அழிப்பது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை