உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  கேரள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சாதிக்குமா?

 கேரள சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., சாதிக்குமா?

கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க சில மாதங்களே இருக்கின்றன. அதற்கு முன்னோட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெற்றி காற்று யார் பக்கம் வீசப் போகிறது என்பதை உணர்த்தி இருக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி என இதுவரை கேரள அரசியல் இருமுனை போட்டியை மட்டுமே பார்த்து வந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wocjmley&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மும்முனை போட்டி

ஆனால், உள்ளாட்சித் தேர்தலில், 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியதன் மூலம் மும்முனை போட்டிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மொத்தம், 505 கிராம ஊராட்சிகள், 79 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 54 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வென்றுள்ளது. அதே சமயம், இந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.,வின் செல்வாக்கும் வலுவாக அதிகரித்திருப்பதை நிச்சயம் மறுக்க முடியாது. தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியதுடன், 26 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகளிலும் அக்கட்சி வெற்றியை சுவைத்துள்ளது. ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி விழுந்து இருக்கிறது.

ஊழல் புகார்

ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே வெற்றியை ஈட்டியுள்ளது. இது தவிர, 340 கிராம ஊராட்சிகள், 63 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும், 28 நகராட்சிகளில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த கால தேர்தலில் பெற்ற வெற்றியை விட குறைவானதாக பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்ட பல ஊராட்சிகள் தற்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வசம் சென்று இருக்கின்றன. கடந்த நான்கரை ஆண்டுகளாக பெரிய அளவில் மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளாத முதல்வர் பினராயி விஜயன், கடைசி நேரத்தில் அவசர, அவசரமாக திட்டங்களை அறிவித்தது தான் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது. இடதுசாரிகளின் சந்தர்ப்பவாத அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள், தங்க கடத்தல் வழக்கு, சபரிமலை தங்கம் திருடு போன விவகாரம் ஆகியவையும் இதில் சேர்ந்து கொண்டன. ஆளுங்கட்சிக்கு எதிராக எழுந்திருக்கும் இந்த மனநிலையை, வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., சரியாக பயன்படுத்துமா, உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றியை சாதகமாக்குமா என்பது தான் கேரள அரசியலில் எழுந்திருக்கும் பெரும் கேள்வி.

எதிர்பார்ப்பு

கடந்த லோக்சபா தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றிருந்ததை மறந்து விட முடியாது. தேர்தலுக்கான வெற்றி விதையை பா.ஜ., ஏற்கனவே ஊன்றிவிட்டது என்றே தோன்றுகிறது. அதற்கான பலன் உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ளது. எனவே, வரும் சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., கணிசமாக தொகுதிகளை அறுவடை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இடத்துக்கான போட்டியில் கூட பா.ஜ., வென்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

rama adhavan
டிச 16, 2025 22:36

பீஜெபீக்கு கூடுதல் ஓட்டு கிடைக்கும். ஆனால் சீட் கிடைக்காது.


Kalyanasundaram Linga Moorthi
டிச 16, 2025 21:49

soon will achieve the target


Venugopal S
டிச 16, 2025 17:56

முளைச்சு மூணு இலை கூட விடவில்லை, அதற்குள் பேச்சைப் பார்!


rama adhavan
டிச 16, 2025 22:39

1952இல் திமுகவும் அப்போது முளைத்து மூன்று இலைகள் தான் தெரியுமா.


Barakat Ali
டிச 16, 2025 14:19

ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை கேரளத்திலும் உள்ளது.. தமிழ்நாட்டிலும் உள்ளது .......


sasidharan
டிச 16, 2025 13:31

கடவுளின் தேசத்தில் தாமரை மலரட்டும். ஆண்ட கட்சிகள் போதும் , மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.


பாலாஜி
டிச 16, 2025 11:26

எந்த தில்லுமுல்லு செய்தாலும் வாய்ப்பில்லை.


vivek
டிச 16, 2025 11:43

பிஜேபி வெல்வது கொத்தடிமை கூட்டம் தடுக்க முடியாது....


பேசும் தமிழன்
டிச 16, 2025 20:45

ஆமாம் கேரளாவில் அநேக இடங்களில் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதாம்.... அதை பற்றி ராகுல் வாயே திறக்கவில்லை..... என்ன ஓட்டு திருட்டில் புகுந்து விளையாடி விட்டீர்கள் போல தெரிகிறது..... நீங்கள் சொன்ன அதே ஓட்டு திருட்டு தான்.... இல்லையென்றால் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லையே ??


ஜெய்ஹிந்த்புரம்
டிச 16, 2025 09:58

நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்


ஜெய்ஹிந்த்புரம்
டிச 16, 2025 09:57

ஆறு மாநகராட்சிகளில் 4 காங்கிரஸ், ஒன்று இடதுசாரி கம்யூனிஸ்ட், ஒன்றில் பாஜக. 84 நகராட்சிகளில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக. இது தான் நிதர்சனம்..


vivek
டிச 16, 2025 11:45

திமுகவிற்கு வெறும் மூணு ஓட்டு தான் விழுந்தது


பாமரன்
டிச 16, 2025 09:01

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் ஆட்கள் கஷ்டப்பட்டு உழைத்து தங்கள் தனிப்பட்ட செல்வாக்கு மூலம் ஒப்பேறினார்கள். மத்த தேர்தல் மாதிரி பெரிய ஜி சின்ன ஜி குட்டி ஜில்லாம் வந்து பொது கூட்டம் போட்டு கையை தூக்கி லபோதிபோன்னு நேருவை திட்டலை...


vivek
டிச 16, 2025 11:46

மூணு ஓட்டு...கதறல்


theruvasagan
டிச 16, 2025 12:59

அந்த மூணு கூட கள்ள ஓட்டாக இருக்கும்.


rama adhavan
டிச 16, 2025 23:45

தமிழகத்தில் எப்படி? தலைவரினாலா? உள்ளூர் தனிநபர் செல்வாக்காலா?


Rajamani, Chidambaram
டிச 16, 2025 08:07

கொஞ்சம் கஷ்டம். அங்கே வேற விதமாக இருக்கும். BJP ல மக்களை கவரும் பல தலைவர்கள் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை