உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே மேடையில் -ஸ்டாலின் - ராமதாஸ் கூட்டணிக்கு வித்திடுமா விழுப்புரம் விழா?

ஒரே மேடையில் -ஸ்டாலின் - ராமதாஸ் கூட்டணிக்கு வித்திடுமா விழுப்புரம் விழா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முதல்வர் ஸ்டாலினும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும் விரைவில் ஒரே மேடையில் தோன்றப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், வரும் சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விழுப்புரத்தில், 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது. வரும் 29ல் நடக்கும் அதன் திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hgxo50n8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, சமூக நீதி போராளிகள் குடும்பங்களுக்கும், சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும் பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என, அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தையும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும், வரும் 29-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அன்றைய தினம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, ''சமூக நீதி போராளிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்,'' என்றார். தி.மு.க., எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பா.ம.க.,வும், அதன் தலைவர்களும் தி.மு.க., அரசு அழைப்பை ஏற்று, ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பா.ம.க., வட்டாரம் கூறும் பதில் வேறு விதமாக இருக்கிறது.பா.ம.க.,வைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சமூக நீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் நிகழ்ச்சி இது. பா.ம.க.,வின் நீண்டகால கோரிக்கையும் கூட. அதனால், இந்த விழாவில் பங்கேற்பதில் ராமதாசுக்கு ஆட்சேபம் இருக்க வாய்ப்பில்லை. அவர் பங்கேற்காவிட்டாலும், அன்புமணியை அனுப்புவார் என தெரிகிறது.மேலும், பா.ம.க.,வின் அரசியல் எதிரியான திருமாவளவன், சமீப காலமாக நடிகர் விஜய் மற்றும் அ.தி.மு.க.வை மையமாக வைத்து, அரசியல் ரீதியாக தன் முக்கியத்துவத்தை வளர்த்து வருகிறார். இது, ராமதாசுக்கு அறவே பிடிக்கவில்லை. அதனால், முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் தோன்றி, தி.மு.க., கூட்டணிக்கு போக்கு காட்டும் திருமாவளவனுக்கு, ராமதாசால் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியும். இதன் வாயிலாக, அரசியல் ரீதியான நடுக்கத்தை திருமாவளவனுக்கு ஏற்படுத்த முடியும் என கருதியே, தி.மு.க., தலைமையும் பா.ம.க.,வை அழைக்கிறது. வன்னியர் இன ஓட்டுகளுக்காக நிகழ்ச்சி அரசு தரப்பில் நடத்தப்படுகிறது என, இந்த நிகழ்ச்சிக்கு வெளிப்படையான காரணம் சொல்லப்பட்டாலும்கூட, ராமதாஸை நிகழ்ச்சிக்கு அழைப்பதன் பின்னணி இதுவாகத்தான் இருக்க முடியும்.'அடுத்து ஆளப் போகும் கட்சியுடன்தான் கூட்டணி' என, அன்புமணி தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த வாய்ப்பை பா.ம.க., பயன்படுத்திக்கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சாண்டில்யன்
டிச 24, 2024 04:46

கருணாநிதியுடன் ஒரேமேடையில் நானா? நடக்காது என்று வீர வசனம் பேசிய அதே ராகுல்தான் அண்ணன் என்று சொல்லி ஸ்டாலினுக்கு ஸ்வீட் தந்தார்.


சாண்டில்யன்
டிச 24, 2024 04:39

ஒன்ன நான் வந்து பார்க்கணுமா எனக்கு அவமானமா இருக்கு


சாண்டில்யன்
டிச 24, 2024 04:39

ஒன்ன நான் வந்து பார்க்கணுமா எனக்கு அவமானமா இருக்கு


சுலைமான்
நவ 24, 2024 19:12

வாய்ப்பில்லை ராஜா..... வேறு ஒருவன் திமுக கூட்டணியில் க்யிக் பிக்ஸ் போட்டு ஒட்டிக்கொண்டுள்ளார்


venugopal s
நவ 24, 2024 18:11

எதிரியை வீழ்த்த முடியாவிட்டால் நண்பராக்கிக் கொண்டு விடுவார் நமது பாமக நிறுவனர்!


சாண்டில்யன்
டிச 24, 2024 19:13

சாரி சின்ன திருத்தம் தேர்தல்வரை எனும் பதம் விட்டுப் போயிருக்கிறது அதை சேர்த்து வாசிக்கவும்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 24, 2024 12:55

விசிக மற்றும் பாமக ஆகியோர் அதிமுக கூட்டணியில் இருந்த போது திமுக / கருணாநிதி குறித்து என்னென்ன பேசினார்கள் என்று ஸ்டாலின் ஒலிப்பதிவுகளைப் போட்டுக் கேட்க வேண்டும் ... அதே போல இருகட்சிகளும் திமுகவுடன் இருந்த பொழுது ஜெ / எடப்பாடியார் குறித்து என்னென்ன பேசினார்கள் என்று எடப்பாடியார் அதன் ஒலிப்பதிவுகளைப் போட்டுக் கேட்க வேண்டும் ...


krishna
நவ 24, 2024 15:47

KETTAL MATTUM ENNA AAGUM SIR.VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA DRAVIDA MODEL KUMBALUKKU KOLLAI ADIPADHU PADHAVI MATTUME ILAKKU.


ராமகிருஷ்ணன்
நவ 24, 2024 07:57

அப்போ குருமா அணி மாறுவது உறுதி ஆகிவிட்டது என்று திமுக பா மா கா உடன் கூட்டணி போல பம்மாத்து காமிக்கிறது.


சசிக்குமார் திருப்பூர்
நவ 24, 2024 06:46

1900 கோடி ரூபாய் அரிசி சிந்திய பஞ்சாயத்தை கிளப்பியது இதற்கு தானோ


சம்பா
நவ 24, 2024 06:03

நிலையில்லாத மரம் வெட்டி நடக்க கூடும் எப்படியும்


சம்பா
நவ 24, 2024 06:02

நிலையில்லாத மரம் வெட்டி நடக்க கூடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை