மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் சாவு
12-Feb-2025
புதுச்சேரி: இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத இறந்த நபர்கள் யார் என, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.புதுச்சேரி, கொசப்பாளையம் கிருஷ்ணர் கோவில் அருகே, நேற்று முன்தினம் 3ம் தேதி, 70 வயது மதிக்கதக்க மூதாட்டி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.அதே போல, அன்றைய தினத்தில், 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், மறைமலை அடிகள் சாலையில் இறந்து கிடந்தார். அவர், யார் என தெரியவில்லை. இருவேறு இடங்களில் இறந்த நபர்கள் குறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-Feb-2025