இறைச்சி கடைகளை மூட உத்தரவு
அரியாங்குப்பம், : மிலாது நபியொட்டி அரியாங்குப்பம் பகுதியில், இறைச்சி கடைகள் மூட வேண்டும் என ஆணையர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இன்று மிலாது நபி தினத்தையொட்டி, ஆடு, மாடு, கோழி மீன், பன்றி இறைச்சி கடைகள் மூடபட வேண்டும் என உள்ளாட்சி துறை செயலகம் ஆணை பிறப்பித்துள்ளது. அதனையடுத்து, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் இன்று மூட வேண்டும். இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.