உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜீப் மோதியதில் 3 பேர் காயம்

ஜீப் மோதியதில் 3 பேர் காயம்

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் கலிவரதன், 53; இவரது மகள் சபிதா, 28; இவர், பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். கடந்த 16ம் தேதி மதியம், கலிவரதன், தனது மகள் சபிதா, அவரது தோழியான கடலுார் வெள்ளப்பாக்கம் கவுசல்யா, 29; ஆகியோரை, மருத்துவமனையில் இருந்து, தனது பைக்கில் வீட்டிற்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார்.புதுச்சேரி - கடலுார் சாலை, பிள்ளையார்குப்பம் சந்திப்பு அருகே வந்தபோது, பைக் மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கலிவரதன், சபிதா, கவுசல்யா ஆகியோர் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார், ஜீப் டிரைவர் நந்தகிஷோர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி