உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 4 பேர் கைது

புதுச்சேரி : பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது வடமங்கலம் - மங்கலம் சாலையில் பொது இடத்தில் மது அருந்திவிட்டு, அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக திட்டி, தகராறில் ஈடுபட்ட கீழ்சாத்தமங்கலம் புதுநகர் குமரன், 31; அருள், 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், கரிக்கலாம்பாக்கம் போலீசார் பொது இடத்தில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்ட கோர்க்காடு அய்யனார் கோவில் தெரு கணேசன், 34; வில்லியனுார் பாலாஜி நகர் கண்ணன், 41, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி