உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய பஸ் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை 55 கிராம் கஞ்சா சிக்கியது

புதிய பஸ் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை 55 கிராம் கஞ்சா சிக்கியது

புதுச்சேரி, : புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீ சார் மோப்ப நாயுடன் நடத்திய திடீர் சோதனையில் 55 கிராம் கஞ்சா சிக்கியது.புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் லோக்கல் பஸ்களில் பணியாற்றும் சில உள்ளூர் ரவுடிகள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போதை பொருள் தடுப்பு பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ஜாகிர்உசேன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஏ.எப்.டி., திடலில் இயங்கும் புதிய பஸ் நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.அப்போது, போதை பொருட்களை கண்டறியும் மோப்ப நாய் பைரவா துணையுடன் பஸ்கள் மற்றும் பஸ் நிலைய வளாகம் முழுதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை பஸ்கள் புறப்படும் இடம் அருகே காகிதத்தில் மடித்து கிடந்த மர்ம பொருளை மோப்ப நாய் பைரவா கண்டறிந்தது.போலீசார் காகிதத்தில் மடிக்கப்பட்டு கிடந்த பொருளை பிரித்து பார்த்தபோது அதில் 55 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொள்வதை அறிந்து கஞ்சா ஆசாமிகள் சாலையில் கஞ்சாவை வீசி சென்றது தெரியவந்தது.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கஞ்சா ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை