எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் துணை இயக்குனர் தற்கொலை முயற்சி
புதுச்சேரி: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் துணை இயக்குனர் துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட இயக்குனர் அருள்விசாகன், இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்து சமூக அமைப்புகள் தொடர் போராட்ட நடத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அருள்விசாகன் நேற்று இரவு துாக்கு மாத்திரை சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இவரை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துணை இயக்குனர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.