பாரதியார் நினைவு நாள்
புதுச்சேரி, : கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டத்தின் சார்பாக மகாகவி பாரதியார் 103வது நினைவு நாளையொட்டி, அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.கருவடிக்குப்பம் சித்தானந்த கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வக்கீல் லெனின்துரை தலைமை தாங்கினார். மேகராஜ் முன்னிலை வகித்தார். பாரதியாரின் சிலைக்கு பேராசிரியர் இளங்கோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் செல்வன், கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானி, ராமமூர்த்தி, உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.