உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்து

சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்து

புதுச்சேரி: ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர் விரைவு ரயில் புதுச்சேரி - விழுப்புரம் பகுதி அளவு ரத்து செய்யப்படுகிறது.புதுச்சேரி - விழுப்புரம் ரயில் பாதையில் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி வரை ரயில் பாதையில் பழுது பார்க்கும் பணி நடக்க உள்ளது. இதனால், இன்று 6ம் தேதி மாலை 6:10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் முன்பதிவில்லா விரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.அதே போல, இந்த ரயில் நாளை 7ம் தேதி காலை 6:25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்படுகிறது.இவ்வாறு, திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்