மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து பெண் சாவு
19-Aug-2024
ஒன்றரை வயது குழந்தை சாவு
23-Aug-2024
புதுச்சேரி : மூச்சு திணறல் ஏற்பட்டு இரும்பு வியாபரி பரிதாபமாக இறந்தார்.புதுச்சேரி, சண்முகாபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி, 55; இரும்பு வியாபாரி. இவர் கடந்த 30ம் தேதி ஸ்கூட்டியில் மொராட்டாண்டிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது எதிரில் வந்த பைக் மோதியது. அன்று முதல் வீட்டில் இருந்து வந்த குப்புசாமி நேற்று முன்தினம் இரவு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Aug-2024
23-Aug-2024