மின்சார நுகர்வோர் சங்கம் பேரணிக்கு டில்லி பயணம்
புதுச்சேரி : மின்துறை தனியார் மயத்தை கண்டித்து, டெல்லியில் நடைபெறும் பேரணிக்கு புதுச்சேரி நிர்வாகிகள் கலந்து கொள்ள நேற்று டெல்லி சென்றனர்.அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் சார்பில் மின்துறை தனியார்மயத்தை கண்டித்துடெல்லியில் வரும் 4,5ம்தேதிகளில் பேரணி, கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க புதுச்சேரி மின்சாரநுகர்வோர் சங்க செயலாளர் சிவக்குமார், கமிட்டி உறுப்பினர் சண்முகம் ஆகியோர் இன்று ரயிலில் டெல்லி புறப்பட்டு சென்றனர். பேரணி, கருத்தரங்கில் புதுச்சேரி மாநில நுகர்வோர்கள் கோரிக்கைகள் குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.