உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். திருவண்டார்கோவில் – கொத்தமபுரிநத்தம் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் திருவாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வமணி, 37, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் வைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை