உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணிடம் நகை பறிப்பு; இருவருக்கு போலீஸ் வலை

பெண்ணிடம் நகை பறிப்பு; இருவருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி : நடந்து சென்ற பெண்ணிடம் 2 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுசாரம், சுந்தரமூர்த்தி நகர், கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி சரஸ்வதி, 50. இவர் கடந்த 1ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள், திடீரென சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்தனர். அவர் கூச்சலிடவே அந்த நபர்கள் அங்கியிருந்து தப்பிச் சென்றனர். சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை