உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

புதுச்சேரி: கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருக்கனுார் அடுத்த கொடாத்துார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதுரை, 58; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் கொடாத்துார் சுடுகாடு அருகே வேப்பமரத்தில் மதுரை துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ