உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

வில்லியனூர்: ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில், சர்வதேச நெகிழி இல்லா நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வில்லியனுாரில் நடந்தது.துவக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.திருக்காமீஸ்வரர் கோவில் எதிரியில் துவங்கிய ஊர்வலம் மாட வீதிகள் வழியாக சென்று பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீய்மைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை