உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசார் - பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்

போலீசார் - பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்

திருக்கனுார்: கோவில் திருவிழாவை முன்னிட்டு காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார்- பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார். காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பேசுகையில், காட்டேரிக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா துவங்கி உள்ளதால், ஊர் பெரியவர்கள் எந்த அசம்பவிதமும் இன்றி விழாக்களை நடத்தி முடிக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்றச்சம்பங்களை தடுக்க கிராமங்களின் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம், கிராமப் புறங்களில் அதிகரித்து வருவதால், கிராமத்திற்குள் புதிய நபர்கள் சுற்றித் திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி