கோவில் திருப்பணிக்கு ரூ.1.75 லட்சம் வழங்கல்
அரியாங்குப்பம், : சின்னவீராம்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை நிதி 1.75 லட்சம் ரூபாய் கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கப்பட்டது.சின்னவீராம்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகப்பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 1.75 லட்சம ரூபாய் வழங்கப்பட்டது. அந்த நிதிக்கான காசோலையை சபாநாயகர் செல்வம் கோவில் அறங்காவல் குழுவினரிடம் வழங்கினார். இந்து சயம அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் உடனிருந்தனர்.