உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.2.30 லட்சம் அபேஸ்

புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.2.30 லட்சம் அபேஸ்

புதுச்சேரி புதுச்சேரியில், 7 பேரிடம் 2.30 லட்சத்தை அபகரித்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சண்முகாபுரம் வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பிய, கவிதா 1 லட்சத்து 24 ஆயிரத்து 991 ரூபாய் அனுப்பி, ஏமாந்தார்.இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த சிவக்குமார் பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, 43 ஆயிரம் ரூபாய் ஏமாந்துள்ளார். சின்னகாலாப்பட்டு எழிலன் 51 ஆயிரம், காரைக்கால் பன்னீர்செல்வம் 2 ஆயிரத்து 500 ரூபாய், புதுச்சேரி சவரிராயலு வீதி ஆரோக்கியராஜ் 3 ஆயிரத்து 500 ரூபாய், வில்லியனுார் சக்திவேல் 2 ஆயிரம், சண்முகாபுரம் ஆறுமுகம் 4 ஆயிரம் என, மொத்தம் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 991 ரூபாய் இழந்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை