உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்குகள் மீது லாரி மோதல் மாணவர் பலி: 3 பேர் படுகாயம்

பைக்குகள் மீது லாரி மோதல் மாணவர் பலி: 3 பேர் படுகாயம்

மயிலம் : இரு பைக்குகள் மீது டிப்பர் லாரி மோதியதில் மாணவர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர். மயிலம் அடுத்த மேட்டுநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பிரேம்குமார்,15; வெளியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் எட்வின் மகன் சாம்சங்,15; திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து, நடந்த சிறப்பு வகுப்பில் பங்கேற்று இரவு வீடு திரும்பினர்.அப்போது, கூட்டேரிப்பட்டில் இருந்து மயிலம் நோக்கி வந்த இரு பைக்குகளில் லிப்ட் கேட்டு இருவரும் வந்தனர். 8:15 மணிக்கு எடப்பாளையம் கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி 2 பைக்குகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.இந்த விபத்தில் பிரேம்குமார் சம்பவ இடத்திலயே இறந்தார். படுகாயமடைந்த சாம்சங் மற்றும் 2 பைக்குகளையும் ஓட்டி வந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி