தமிழ்சங்கம், தட்டாஞ்சாவடியில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம்
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியின் சிறப்பு வரி வசூல் முகாம், இன்று தமிழ்சங்கம், தட்டாஞ்சாவடியில் நடக்கிறது.உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு: உழவர்கரை நகராட்சி சார்பில், வீட்டு வரி, சொத்துவரி, சேவை வரி செலுத்துபவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று 2ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வெங்கட்டா நகர் தமிழ் சங்கத்தில் நடக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, காமராஜர் நகர், வெங்கட்டா நகர், பிருந்தாவனம், சாரம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள வீட்டு வரி, சேவை வரி நிலுவைதாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தலாம்.இதேபோல், இன்று 2ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையத்தில் சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது. உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் வசிப்பவர்களும் வீட்டுவரி, சொத்துவரி, சேவை வரியை செலுத்தி, வட்டி, ஜப்தி நடவடிக்கையை தவிர்த்து கொள்ளலாம். மேலும் இவ்வரிகளை igram.py.gov.inஎன்ற இணையதள முகவரியில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.