கோவில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம்
புதுச்சேரி: வாதானுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது. மண்ணாடிப்பட்டு தொகுதி வாதானுாரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக திருப்பணி மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அதில், கோவில் திருப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கோவில் கமிட்டி தலைவராக மவுலிஸ்வரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவில் கமிட்டி தலைவருக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், திருப்பணிகள் சிறப்பாக நடக்க மக்கள் அனைவரும் ஒற்றுமை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். கூட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.