உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிரைவரை தாக்கிய மூவர் கைது

டிரைவரை தாக்கிய மூவர் கைது

நெட்டப்பாக்கம்: முன்விரோதத்தில் டிரைவரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.மடுகரை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 39, டிரைவர். இவருக்கும் தமிழக பகுதியான பரசுரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார் 37, என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அசோக்குமார் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் 34, ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 37 ஆகியோர் சேர்ந்து செந்தில்குமாரை சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து அசோக்குமார் உள்ளிட்ட மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை