உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத நபர் கடலில் குதித்து தற்கொலை

அடையாளம் தெரியாத நபர் கடலில் குதித்து தற்கொலை

புதுச்சேரி : புதுச்சேரி பழைய துறைமுகத்தில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி பழைய துறைமுகத்தில் நேற்று மாலை 5:30 மணியளவில், 45 வயது மதிக்கத் தக்க ஆண் நபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பழைய துறை முகத்தில் கரை ஒதுங்கியது. தகவலறிந்த ஒதியன்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப்பதிந்து இறந்த நபர் யார், எந்த ஊர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை 2228067 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி