உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் பங்கு சந்தை ரூ 4.91 லட்சம் இழந்த பெண்

ஆன்லைன் பங்கு சந்தை ரூ 4.91 லட்சம் இழந்த பெண்

புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் கலையரசி. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய கலையரசி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் பங்கு சந்தையில் ரூ. 4. 91 லட்சம் செலுத்தி, மர்மநபர் அளித்த பணிகளை செய்துள்ளார்.அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது இணையதள பக்கம் முடங்கியது. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், திருபுவனை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ரூ.17 ஆயிரம், மற்றொரு சதீஷ்குமார் ரூ.16 ஆயிரம் என 3 நபர்களிடம், ரூ. 5.24 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி