உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  3 பேரிடம் ரூ.1.79 லட்சம் மோசடி

 3 பேரிடம் ரூ.1.79 லட்சம் மோசடி

புதுச்சேரி: 3 பேரிடம் ரூ. 1.79 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, ஜி.என். பாளையத்தை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர், ஐ.எம்.பி.எஸ்., முறையில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாயை எடுத்தார். இதேபோல் வில்லியனுார் சேர்ந்த நபர் ஆயிரம் ரூபாய். முத்தியால்பேட்டை சேர்ந்த நபர் ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடி மூலம் இழந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை