உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்கள் தவறவிட்ட 30 போன்கள் ஒப்படைப்பு

பொதுமக்கள் தவறவிட்ட 30 போன்கள் ஒப்படைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி, சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, சைபர் மோசடி தொடர்பாக புகார்கள் மற்றும் குறைகளை தெரிவித்தனர். அதில், மக்கள் அளித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர்களுக்கு சீனியர் எஸ்.பி., உத்தரவிட்டார். மேலும், பொது மக்கள் தவறவிட்ட ரூ. 7 லட்சம் மதிப்பிலான 30 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை