உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த 4 பேரிடம் ரூ.10.79 லட்சம் மோசடி

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த 4 பேரிடம் ரூ.10.79 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து 4 பேர் ரூ. 10.79 லட்சம் ஏமாந்துள்ளனர். முத்தியால்பேட்டை சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார். அது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றிலும், அவரை மர்ம நபர் இணைத்துள்ளார். அந்த வாட்ஸ் குரூப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு அதிக அளவில் லாப பணம் வருவதாக பதிவிட்டு உள்ளனர். இதைநம்பி, மர்மநபர் தெரிந்த ஆன்லைன் டிரேடிங்கில் 6 லட்சத்து 71 ஆயிரம் 800 முதலீடு செய்துள்ளார். அதற்கான லாப பணத்தை எடுக்க முயன்றபோது, பணத்தை எடுக்க முடியவில்லை. அதன் பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த நபர் 2 லட்சத்து 20 ஆயிரத்து 200, முதலியார்பேட்டை சேர்ந்த நபர் 87 ஆயிரம், வேல்ராம்பட்டை சேர்ந்த நபர் ஒரு லட்சம் என, மொத்தம் 4 பேர் போலி ஆன்லைன் டிரேடிங்கில் 10 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை