உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

அரியாங்குப்பம்; அரியாங்குப்பத்தில், கஞ்சா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம், சுவர்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்ற 4 வாலிபர்களை, பிடித்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.விசாரணையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த தினேஷ், 22; பி.சி.பி., நகர் புஷ்பராஜ், 19; ராம்குமார், 21; விஷ்வா, 29, ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 10 ஆயிரம் மதிப்புள்ள, 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நால்வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ