மேலும் செய்திகள்
புகார் பெட்டி..
24-May-2025
புதுச்சேரி : உருளையன்பேட்டை, ராஜிவ் காந்தி நகரில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்த நாய் ஒன்றை, அம்மி கல்லால் தாக்கினர். நாயின் அலறல் சத்தம் கேட்டு, மக்கள் ஓடி வந்ததால், அக்கும்பல் தப்பிச் சென்றது.தகவலறிந்த வாய்ஸ் பார் வாய்லஸ் விலங்கு நல அமைப்பு தலைவர் அசோக்ராஜ் மற்றும் நிர்வாகிகள், உயிருக்கு போராடி நாயை மீட்டு, ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவமனையில் முதலுதவி கிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24-May-2025