பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு விருது
புதுச்சேரி : பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி மாரியப்பன் சுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 18 ம் ஆண்டு விழா நடந்தது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் எம்.ஜி.ஆர் சேவை விருது வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவர் மாரியப்பன், அபயம் தொண்டு நிறுவனர் சுந்தர முருகன் விருது வழங்கினர். நண்பர்கள் தோட்டம் தலைவர் திருநாவுக்கரசு, கலைப் பண்பாட்டு துறை கண்காணிப்பாளர்கள் அருள்ராஜ், கலீபா, கனகராசு கலந்து கொண்டனர்.