உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரேஷன் கார்டில் பல கோடி மோசடி; தலைமை செயலரிடம் பகீர் புகார்

ரேஷன் கார்டில் பல கோடி மோசடி; தலைமை செயலரிடம் பகீர் புகார்

புதுச்சேரி : ரேஷன் கார்டுகள் மூலம் நடந்த பல கோடி மோசடியை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என, தலைமை செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவணமாக வைத்து வழங்கப்படுகிறது. குறிப்பாக இலவச அரிசியை சொல்லலாம். இதில் பல கோடி மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க தலைமை செயலர் சரத் சவுகான் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என, சாரத்தை சேர்ந்த வக்கீல் பாலமுருகன், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் புகார் அளித்தார்.அவர் கூறியதாவது:மாநிலத்தில் மொத்தம் 3,62,136 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேஷன் கார்டுகள்-1,59,404; சிவப்பு ரேஷன் கார்டுகள்-2,06,73. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் 1,07,000 மாணவர்கள் படிக்கின்றனர்.அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேஷன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேஷன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் 1,04,000 ரேஷன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 63 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை