பைக் திருட்டு
புதுச்சேரி: அரியூர் குமரன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 50, கூலித்தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான பைக்கை கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். பின் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பைக் காணமால் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.