அனுமதியின்றி ராட்டினம் இயக்கிய 2 பேர் மீது வழக்கு
அரியாங்குப்பம் : கோவில் விழாவில், அனுமதியின்றி ராட்சத ராட்டினத்தை இயக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. கடற்கரை பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமலும், பாதுகாப்பு இல்லாமல் இரவு நேரத்தில் ராட்சத ராட்டினம் இயக்கப்பட்டது. ராட்டினத்தை இயங்கிய, விழுப்புரம் மாவட்டம், மைலத்தை சேர்ந்த,தணிகாசலம் மனைவி புவனேஸ்வரி, அதே பகுதியை சேர்ந்த 38, புருேஷாத்தமன், 33, என்பது தெரியவந்து. அவர்கள் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.