உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரியில் அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சன்னியாசிதோப்பு மெயின் ரோட்டில், பொதுமக்களுக்கு இடையூறாக 8 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியில், நகராட்சி உதவிப் பொறியாளர் யுவராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பேனர்கள் வைத்த நபர் மீது, ஓதியன்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !