உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி: ராஜிவ் சதுக்கத்தில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகில் சாலையோர நடைபாதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறையினருக்கு புகார் வந்தது. அதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரி நேற்று உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !