உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., மாநில பொதுச்செயலர் அன்னதானம் வழங்கல்

காங்., மாநில பொதுச்செயலர் அன்னதானம் வழங்கல்

புதுச்சேரி : வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழாவில் காங்., மாநில பொதுச்செயலர் மருதுபாண்டியன் அன்னதானம் வழங்கினார். வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 97ம் ஆண்டு செடல் உற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று மதியம் 1:00 மணிக்கு நடந்தது. செடல் திருவிழாவில் ராஜ்பவன் தொகுதி காங்., மாநில பொதுச் செயலர் மருதுபாண்டியன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி