உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வியாபாரிக்கு வெட்டு

வியாபாரிக்கு வெட்டு

புதுச்சேரி: சொக்கநாதன்பேட் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 42; இவர் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், தட்சணாமூர்த்தி நகரை சேர்ந்த வாசு என்பவருக்கும், தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம், குணசேகரன் வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது, வாசுவின் மகன்களான பிரதீப், தனுஷ் இவர்களின் நண்பர் குமரகுருபள்ளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் குணசேகரனிடம் தகராறு செய்தனர். அப்போது, பிரதீப் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணசேகரனை வெட்டினார். படுகாயமடைந்த, அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்கு பதிந்து, பிரதீப் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி