3 பேரிடம் சைபர் கும்பல்: ரூ.12.50 லட்சம் மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.12.50 லட்சம் இழந்துள்ளனர். பாகூரை சேர்ந்தவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 91 ஆயிரத்து 300 முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. இதேபோல், வெங்கடா நகரை சேர்ந்தவர் 10 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 49 ஆயிரம் என மொத்தம் 3 பேர் மோசடி கும்பலிடம் 12 லட்சத்து 50 ஆயிரத்து 300 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.