உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாட்ஸ் ஆப் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ் ஆப் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி: வாட்ஸ் ஆப்களில் வரும் மொபைல் செயலிகளை பதவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், தற்போது வாட்ஸ் ஆப் குரூப்கள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து 'சரவணா ஸ்டோர்ஸ் வணிக அரசின் உதவி திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள்' என்ற பெயரில் போலி லிங்க் ஒன்று பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டால், உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் மோசடியாக எடுத்து ஏமாற்றி விடுகின்றனர். ஆகையால், வாட்ஸ் ஆப்களில் வரும் இத்தகைய லிங்குகளை பதவிறக்கம் செய்ய வேண்டாம். இதேபோல், யோனோ எஸ்.பி.ஐ., (YONO SBI) என்ற பெயரில் வரும் லிங்க் கையும் யாரும் பதிவிறக்கம் செய்து பணத்தை ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1930, 0413 2276144, 9489205246 எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை