இஸ்லாமியருக்கு அடக்க தளம் சட்டசபையில் கோரிக்கை
புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்;சம்பத் (தி.மு.க): உழவர்கரை நகராட்சியில் இஸ்லாமியர்களுக்கு அடக்க தளம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கியும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் காலதாமதம் ஏற்படுகிறது. முதல்வர் ரங்கசாமி: காலாப்பட்டு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சம்பந்தமாக பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால், இந்த திட்டம் கைவிடப்பட்டது. கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): பிம்ஸ் மருத்துவமனை அருகே இடம் உள்ளது. அங்கு அடக்க தளம் அமைக்கலாம். முதல்வர் ரங்கசாமி: அடக்கதளம் அமைப்பதற்கு உண்டான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.